- ஸ்வர்ணலட்சுமி
20 25 டிசம்பர் மாதம் 17ஆம் தேதி புதன்கிழமை ஆன இன்று சிவபெருமானுக்குரிய பிரதோஷ விரதமும், முருகப்பெருமானுக்குரிய விசாகம் நட்சத்திரமும் சேர்ந்து ஒரே நாளில் வருவது கூடுதல் சிறப்பு மிக்க நாளாக அமைந்துள்ளது. இந்த பிரதோஷ நாள் மார்கழி மாதத்தின் முதல் பிரதோஷம் மற்றும் இந்த வருடத்தின் கடைசி பிரதோஷம் நாளாகும். ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரியோதசி திதியில் பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வதனால் செல்வ வளம் பெருகும்,பாவங்கள் நீங்கி,வாழ்க்கையில் அமைதியும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பிரதோஷ காலம்:

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னும் பின்னும் உள்ள 1.5 மணி நேரமே பிரதோஷ காலமாகும்.இது மாலை4:30முதல் 6:00 மணி வரை அல்லது 7:00மணி வரை. இன்று மாலை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பிரதோஷ பூஜை யில் கலந்து கொள்வது சிறப்பு. சிவன் மற்றும் நந்தி பகவானை வழிபடுவதும், நந்திக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. சிலர் நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலை வழிபாட்டிற்கு பின்னரே விரதம் முடித்துக் கொள்வார்கள். இந்த நேரத்தில் சிவபெருமானை மனதார நினைத்து "ஓம் நமச்சிவாய "மந்திரத்தை ஜெபிப்பது அதீத நன்மைகளை தரும்.
பிரதோஷ நேரத்தில் பாட வேண்டிய சிவ மந்திரம்:
ஓம் சர்வாய தேவாய நம:
ஓம் பவாய தேவாய நம :
ஓம் ருத்ராய தேவாய நம :
ஓம் உக்ராய தேவாய நம :
ஓம் பீமாய தேவாய நம :
ஓம் பசுபதேர் தேவாய நம :
ஓம் ஈசானஸ்ய தேவாய நம :
ஓம் மஹ தேர் தேவாய நம :
இந்த எட்டு மந்திரத்தையும் பிரதோஷ நேரத்தில் பாடுவதனால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.
வாழ்வில் உயர்வை கொடுக்கும் சிவ மந்திரம் :
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி! தன்னோ ருத்ர பிரசோத யாத்"
சிவபெருமானின் இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு அனைத்து மனக்கவலைகளும், துக்கங்களும் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
பிரதோஷ தினத்தில் கூற வேண்டிய சிவன் மூல மந்திரம் :
"சிவ சிவ என் கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாளும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே "
-திருமூலர் திருமந்திரம்
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வர அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீரும்.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}