-வி.ஆர். விஜயலட்சுமி
ஈர்த்துக் கொள்ளும் நம்மை
நம் உயரிய அன்பே...
நாளும் கொள்ளை கொள்ளும் நம் வாழ்வே..
நீயின்றி நானில்லை....
நானின்றி நீயில்லை...
நாமன்றி நம்முலகில் வேறு யாருண்டு?
கண்களால் கலந்து கைகளால் உணர்ந்து
நெஞ்சம் மாறி புகுந்து உனக்காய் நான் அழுது ....
என் வலி பொறுக்காமல் உனது விழியோர ஈரமதை
எனது நுனி விரலால் சுண்டிவிட்டு
உன்னை நான் கண்டபோது கசிந்தது
கண்ணீர் மட்டுமல்ல நம் காதலும் தான்....
இது உறவுக் காதலா?
அன்றி உண்மைக்காதலா
அன்றி உட்புகுந்த காதலா?
உவமைக்காதலா?
அன்றி உவகைக்காதலா?
தன்மைக் காதலா
அன்றி தனிமைக் காதலா?
கருத்தொருமித்தக் காதலா? அன்றி
கருத்தாழக் காதலா?
கண்டவர் கண் பட
கைகள் கோர்த்து நாம் நடக்க
விண்ணிலிருந்து வீழ்ந்த சொர்க்கம்
நம் மனக்கண் முன் நின்று, மன்றாடி கவி பாடியது... !
(வி.ஆர். விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்டம்)
Jokes: அண்டாவை மட்டும் வச்சியே.. கூடவே ஒரு குண்டாவையும் வச்சுருக்கலாம்ல
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
வயிறு பசிக்க ஆரம்பிச்சுருச்சா.. சுவையான பக்கோடா குழம்பு செய்யலாமா???
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
புற்றுநோய்.. பயப்படாதீர்கள்.. விழிப்புணர்வோடு இருங்கள்.. நிச்சயம் வெல்லலாம்!
{{comments.comment}}