-வி.ஆர். விஜயலட்சுமி
ஈர்த்துக் கொள்ளும் நம்மை
நம் உயரிய அன்பே...
நாளும் கொள்ளை கொள்ளும் நம் வாழ்வே..
நீயின்றி நானில்லை....
நானின்றி நீயில்லை...
நாமன்றி நம்முலகில் வேறு யாருண்டு?
கண்களால் கலந்து கைகளால் உணர்ந்து
நெஞ்சம் மாறி புகுந்து உனக்காய் நான் அழுது ....
என் வலி பொறுக்காமல் உனது விழியோர ஈரமதை
எனது நுனி விரலால் சுண்டிவிட்டு
உன்னை நான் கண்டபோது கசிந்தது
கண்ணீர் மட்டுமல்ல நம் காதலும் தான்....
இது உறவுக் காதலா?
அன்றி உண்மைக்காதலா
அன்றி உட்புகுந்த காதலா?
உவமைக்காதலா?
அன்றி உவகைக்காதலா?
தன்மைக் காதலா
அன்றி தனிமைக் காதலா?
கருத்தொருமித்தக் காதலா? அன்றி
கருத்தாழக் காதலா?
கண்டவர் கண் பட
கைகள் கோர்த்து நாம் நடக்க
விண்ணிலிருந்து வீழ்ந்த சொர்க்கம்
நம் மனக்கண் முன் நின்று, மன்றாடி கவி பாடியது... !
(வி.ஆர். விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்டம்)
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}