சென்னை: வடகடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை இன்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தாலும், தென்மேற்கு பருவ மழையாலும், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேபோல மாலையில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரத்தில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் வெயிலும், மழையும் மாறி மாறி நிலவி வருகிறது. முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் சென்னையில் காலையில் வெயில் அதிகரித்து, மாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கேற்ப காலையிலிருந்து நல்ல வெயில் வெளுத்தது. இன்று சுளீரென வெயில் அடித்துக் கொண்டுள்ள நிலையில் அடுத்து மழை வரும் என்று வெதர்மேன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், .மழைக்கான சூழல் கரெக்ட்டா வந்துகொண்டே இருக்கிறது. இன்று மாலை அல்லது இரவில் பெய்ய போகும் மழைக்காக நாம் காத்திருப்போம். இன்றைக்கு கண்டிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் மழை மிஸ் ஆகாது.
மற்ற மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தரம்புரி, திருப்பத்தூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆனால் கே டி சி சி அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை பிராந்தியத்தில் தான் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என்ன தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}