மனசு உடைஞ்சுடுச்சு... செல்ல நாயின் பிரிவை மறக்க முடியாமல் தவிக்கும் குஷ்பு

May 12, 2023,04:27 PM IST
சென்னை : இறந்து போன தனது நாயின் பிரிவை தாங்க முடியாமல் இருக்கும் துயரத்தை ட்விட்டரில், போட்டோ பதிவிட்டு பகிர்ந்துள்ளார் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு.

நடிகை குஷ்பு, தனது வீட்டில் வளர்ந்த இரண்டு செல்ல நாய்களில் ஒன்று இறந்து விட்டதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவிட்டிருந்தார். அதில் அவர், 12 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் ஒருவராக இருந்தாய். உன் புரிதல், அளவில்லாத பாசம், சிரிப்பு உள்ளிட்ட குணங்கள் எங்களை கவர்ந்தது. உன் இழப்பால் நாங்கள் இதயம் நொறுங்கிவிட்டோம். நீ சாந்தியடைந்து விட்டாய் என நம்புகிறோம்.



உன்னை போன்று வேறு யாரும் இல்லை. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் குஷ்புவிற்கு ஆறுதல் கூறி இருந்தனர். குஷ்பு தனது செல்ல நாய்க்கு ஸ்நூப்பி சுந்தர் என வைத்து வளர்ந்து வந்தார். இந்த நாய் குஷ்புவிற்கு மிகவும் பிரியமானதாம்.

இந்நிலையில் ஸ்நூப்பி சுந்தருடன் தான் கொஞ்சி விளையாடிய போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்று ட்விட்டரில் பகிர்ந்து குஷ்பு, நீ எங்களை விட்டு பிரிந்து 3 வாரங்கள் ஆகி விட்டது. ஆனால் தினந்தோறும் நாங்கள் மிஸ் செய்கிறோம். நீ இல்லாமல் வீடே வெறிச்சோடிப்போய், வெறுமையாக உள்ளது. நீ சாந்தி அடைந்திருப்பாய் என நம்புகிறோம். அமைதி கொள்வாய் பேபி. நீ எப்போதும் என்னுடைய செல்ல பையன் தான் என தனது செல்ல நாயின் பிரிவை தாங்க முடியாமல் கருத்து பதிவிட்டுள்ளார்.

உடைந்த இதயம், கண்ணீருடன் இருக்கும் எமோஜியுடன் குஷ்பு பகிர்ந்திருக்கும் இந்த பதிவை பார்த்து விட்டு, இதற்கும் ரசிகர்கள் பலர்  அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்