நைனிடால்: உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் மலைச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கீர் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தராலி பகுதியில் பல கட்டிடங்களை காட்டாற்று வெள்ளதால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக பெய்த பெரும் மழையால் வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

நைனா என்ற கிராமத்தில் ஹனுமான் கோயில் அருகே பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டது. திகிலூட்டும் வகையிலான மண்சரிவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த மண்சரிவில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் கூறுகையில், உத்தரகாசியின் தாராலியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. மீட்புப் பணிகளில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
உத்தராகண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி இறந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார். உத்தர்காசி நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஒருவருக்கும் உதவிகள் விடுபடாமல் இருக்கும்படி செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
{{comments.comment}}