நைனிடால்: உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் மலைச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கீர் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தராலி பகுதியில் பல கட்டிடங்களை காட்டாற்று வெள்ளதால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக பெய்த பெரும் மழையால் வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

நைனா என்ற கிராமத்தில் ஹனுமான் கோயில் அருகே பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டது. திகிலூட்டும் வகையிலான மண்சரிவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த மண்சரிவில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் கூறுகையில், உத்தரகாசியின் தாராலியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. மீட்புப் பணிகளில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
உத்தராகண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி இறந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார். உத்தர்காசி நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஒருவருக்கும் உதவிகள் விடுபடாமல் இருக்கும்படி செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}