இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

Oct 22, 2025,09:01 PM IST

கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த  அரசியல் தலைவர் ஒருவர் அவரது அலுவலகத்திலேயே வைத்து இன்று சரமாரியாக சுடப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


இலங்கையில் அண்மைக்காலமாகப் பெருகிவரும் கொலைச் சம்பவங்களில் ஒரு அரசியல்வாதியை இலக்குவைத்து நடந்த முதல் நிகழ்வு இதுவாகும்.


வெலிகம கடற்கரை நகர சபைத் தலைவராக இருந்தவர் லசந்த விக்கிரமசேகர (38). இவர் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்தவர். தனது அலுவலகத்தில் அமர்ந்து, தொகுதி மக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியை மறைத்து வைத்தபடி உள்ளே புகுந்த ஒரு நபர், லசந்தாவை நோக்கி பலமுறை சரமாரியாக சுட்டார். இதில் லசந்த ரத்த வெள்ளத்தில் மிதந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் போய் விட்டது.




லசந்தாவை சுட்ட பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எதற்காக இந்த விபரீதச் செயல் என்று தெரியவில்லை. போலீஸார் கொலையாளியைப் பிடிக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.


இலங்கையில் இந்த ஆண்டு வன்முறைக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்து அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு நடந்த முதல் அரசியல்வாதியின் கொலை இதுவாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்