கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் அவரது அலுவலகத்திலேயே வைத்து இன்று சரமாரியாக சுடப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இலங்கையில் அண்மைக்காலமாகப் பெருகிவரும் கொலைச் சம்பவங்களில் ஒரு அரசியல்வாதியை இலக்குவைத்து நடந்த முதல் நிகழ்வு இதுவாகும்.
வெலிகம கடற்கரை நகர சபைத் தலைவராக இருந்தவர் லசந்த விக்கிரமசேகர (38). இவர் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்தவர். தனது அலுவலகத்தில் அமர்ந்து, தொகுதி மக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியை மறைத்து வைத்தபடி உள்ளே புகுந்த ஒரு நபர், லசந்தாவை நோக்கி பலமுறை சரமாரியாக சுட்டார். இதில் லசந்த ரத்த வெள்ளத்தில் மிதந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் போய் விட்டது.

லசந்தாவை சுட்ட பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எதற்காக இந்த விபரீதச் செயல் என்று தெரியவில்லை. போலீஸார் கொலையாளியைப் பிடிக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இலங்கையில் இந்த ஆண்டு வன்முறைக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்து அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு நடந்த முதல் அரசியல்வாதியின் கொலை இதுவாகும்.
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்
நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்
திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?
பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
{{comments.comment}}