கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் அவரது அலுவலகத்திலேயே வைத்து இன்று சரமாரியாக சுடப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இலங்கையில் அண்மைக்காலமாகப் பெருகிவரும் கொலைச் சம்பவங்களில் ஒரு அரசியல்வாதியை இலக்குவைத்து நடந்த முதல் நிகழ்வு இதுவாகும்.
வெலிகம கடற்கரை நகர சபைத் தலைவராக இருந்தவர் லசந்த விக்கிரமசேகர (38). இவர் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்தவர். தனது அலுவலகத்தில் அமர்ந்து, தொகுதி மக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியை மறைத்து வைத்தபடி உள்ளே புகுந்த ஒரு நபர், லசந்தாவை நோக்கி பலமுறை சரமாரியாக சுட்டார். இதில் லசந்த ரத்த வெள்ளத்தில் மிதந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் போய் விட்டது.
லசந்தாவை சுட்ட பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எதற்காக இந்த விபரீதச் செயல் என்று தெரியவில்லை. போலீஸார் கொலையாளியைப் பிடிக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இலங்கையில் இந்த ஆண்டு வன்முறைக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்து அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு நடந்த முதல் அரசியல்வாதியின் கொலை இதுவாகும்.
சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்
சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!
டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!
தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!
மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)
குருவிக்கூடு!
{{comments.comment}}