- பி.ஆர்.ஹெலன்
இன்று தமிழர் புத்தாண்டு
தமிழனுக்கென்றே கொண்டாடப்படும் புத்தாண்டு
இனிய கனிகளின் முன் கண்விழித்து
கண்ணாடி முன் நின்று
முகம் பார்த்து
மனமகிழ் மஞ்சளுடன்
குளியலிட்டு
படைத்தவனுக்கே
படைத்ததனை படையலிட்டு
எல்லா வரங்களையும் தர வேண்டும்
இப்புதிதொரு நன்னாளில் இறைவா

கனிவான குணத்தையும்
கண்ணாடி போன்று
உண்மையான
பிரதிபலிப்பையும்
பெற்று
மனிதனே உனக்குள்
புதியதொரு மாற்றத்தை
கொண்டு வரும்
எல்லா நாளுமே
புத்தாண்டு தான்
என்பதை உணர்வாயா
அறுசுவையை
உணவில் சேர்த்தால்
சுவைப்பது போல்
வாழ்வில் தோன்றும்
வெற்றிகளை ஏற்று தோல்விகளை மாற்றி
இன்பம் கானும்
இனிய நாளே இப்புத்தாண்டு
என்பதை ஏற்றுக்கொள்வாயா!
(Helen . P. R, Social teacher , GHS, Melpattampakkam , Cuddalore)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}