திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. இந்த 3 கிராமங்களும் மண்ணுக்குள் புதைந்தன. இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420யை கடந்துள்ளது. 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. பலரின் உடல் உறுப்புகள் மட்டும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட 1900த்திற்கும் மேற்பட்டவர்கள் 16 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உறவினர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் முகாம்களில் உள்ளவர்களை மறுவாழ்வுக்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வயநாடு நிலச் சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமானோர் நிவாரண உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், உடமைகள் மற்றும் வீடுகளை இழந்து தவிப்பவர்கள், உயிர் பிழைத்தவர்கள் என அனைத்து தரப்பினர்களின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய உள்ளதாக கேரளா வங்கியின் சூரல்மாலா கிளையில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 29 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிகிறது. தள்ளுபடி செய்ய உள்ள தொகை குறித்து இன்னும் அந்த வங்கி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இந்த கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன் வங்கி ஊழியர்களும் தாமாக முன் வந்து தங்களுடைய 5 நாட்கள் சம்பளத்தை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}