Loksabha Elections 2024: திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளோம்.. இந்திய கம்யூனிஸ்ட் தகவல்

Feb 03, 2024,06:03 PM IST

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக குழு பேச்சு நடத்தியது. 


திமுக கூட்டணியில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 9 சீட்டுகளைக் கொடுத்தது. அதில் தேனியில் தோற்றும், மற்ற 8 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


இந்த முறை கூடுதல் இடங்களை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருப்பினும் திமுக எத்தனை தரும் என்று தெரியவில்லை. அதேசமயம், சமீபத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்ததாக இரு கட்சிகளுமே திருப்திகரமாக தெரிவித்திருந்தன.




இந்த நிலையில் அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த தேர்தலில் திருப்பூர் மற்றும் நாகப்பட்டனம் (தனி) ஆகிய இரு தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் திருப்பூரில் கே.சுப்பராயன், நாகப்பட்டனத்தில் எம். செல்வராசு ஆகியோர் வெற்றி பெற்றனர்.


இந்த முறையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று மாலை இரு கட்சிகளுக்கும் இடையே அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் முதல் கட்ட பேச்சுக்கள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் கூறுகையில், கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளோம். பட்டியலும் கொடுத்துள்ளோம். முதல்வர் வெளிநாட்டிலிருந்து 7ம் தேதி திரும்புகிறார். அதன் பின்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்றனர்.


இன்றைய பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, எம்.பி. சுப்பராயன் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவும் கலந்து கொண்டது.

சமீபத்திய செய்திகள்

news

JCD Prabhakar: சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஜேசிடி பிரபாகர்.. எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்!

news

கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்