சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பொது விடுமுறை வழங்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில்,
வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் தேதி குறிச்சாச்சு. இதற்காக தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 483 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மார்ச் 27 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து இந்த மனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல்களமே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. லோக்சபா தேர்தல் நடைபெறும் (ஏப்ரல் 19) நாளன்று பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரி வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று ஊழியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். இது தவிர தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ன்று தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறி எந்த அசம்பாவிதமும் செய்யாமல், ஜனநாயக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், இதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}