சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பொது விடுமுறை வழங்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில்,
வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் தேதி குறிச்சாச்சு. இதற்காக தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 483 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மார்ச் 27 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து இந்த மனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல்களமே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. லோக்சபா தேர்தல் நடைபெறும் (ஏப்ரல் 19) நாளன்று பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரி வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று ஊழியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். இது தவிர தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ன்று தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறி எந்த அசம்பாவிதமும் செய்யாமல், ஜனநாயக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், இதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}