சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரபிக் கடல் நிலவரம்:
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகத் திரண்டு, இன்று (அக்டோபர் 22, 2025) காலை 0530 மணி அளவில் அதே பகுதியில், நிலை கொண்டுள்ளது. இது அமினிதிவி (லட்சத்தீவு) தீவிலிருந்து சுமார் 630 கி.மீ. மேற்கு-தென்மேற்கிலும், பனாஜியிலிருந்து (கோவா) 1020 கி.மீ. தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடல் நிலவரம்:
தமிழகக் கடலோரத்தை ஒட்டிய
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு இலங்கை கடலோரத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த நன்கு குறிக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்டோபர் 22, 2025) காலை 0530 மணி அளவில் தமிழகக் கடலோரத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும் போது, அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரங்களை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
{{comments.comment}}