ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியிலான மற்றும் அறிவியல் ரீதியிலான அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து வரும் நிலையில், இன்று மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'எல்.வி.எம்.3-எம்.6' (LVM3-M6) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ‘புளூ பேர்ட்’ (Blue Bird) என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் துல்லியமாகச் செயல்பட்டு, செயற்கைக்கோளை அதன் இலக்கு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான LVM3 (Launch Vehicle Mark 3), கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதில் தனது நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவின் உலகளாவிய சந்தை மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!
வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன்
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
காத்திருந்த தொட்டில்
பிறவா வரம் அளிக்கும் பேரூர் பட்டீஸ்வரர்.. இன்றும் நடக்கும் 5 அதிசயங்கள்!
{{comments.comment}}