ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியிலான மற்றும் அறிவியல் ரீதியிலான அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து வரும் நிலையில், இன்று மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'எல்.வி.எம்.3-எம்.6' (LVM3-M6) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ‘புளூ பேர்ட்’ (Blue Bird) என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் துல்லியமாகச் செயல்பட்டு, செயற்கைக்கோளை அதன் இலக்கு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான LVM3 (Launch Vehicle Mark 3), கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதில் தனது நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவின் உலகளாவிய சந்தை மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}