சிவராஜ் சவுகானுக்கு வாய்ப்பில்லை.. மத்தியப் பிரதேச பாஜக முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

Dec 11, 2023,05:31 PM IST

 போபால்: மூத்த தலைவரும், தற்போதைய முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானின் மீண்டும் முதல்வராகும் கனவு தகர்ந்துள்ளது. புதிய முதல்வராக மோகன் யாதவை பாஜக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.


மத்தியப் பிரதேச பாஜகவில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர் சிவராஜ் சிங் சவுகான். 4 முறை அங்கு முதல்வராக  இருந்துள்ளார். தொடர்ந்து அவரே முதல்வராக இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு முதல்வரை மாற்றியுள்ளது பாஜக.


சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு மீண்டும் சவுகானே போட்டியிட்டார். ஆனால் அவருக்கு கட்சிக்குள் கடும் போட்டி காணப்பட்டது. கட்சித் தலைமையும் கூட புதிய தலைமுறைக்கு முதல்வர் பதவியைத் தர விரும்பியது. ஆனால் சவுகான் போட்டியிலிருந்து விலகாததால் இழுபறி நிலை நிலவியது.




இந்த நிலையில் இன்று போபாலில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுகான் ஆட்சியில் அவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். உஜ்ஜைனி தொகுதியிலிருந்து 3 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோகன் யாதவ்.


மோகன் யாதவ் தேர்வைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வரை மட்டும் பாஜக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நேற்றுதான் சத்திஸ்கர் மாநில முதல்வர் பதவிக்கான இழுபறி முடிவுக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம்.


சமீபத்திய செய்திகள்

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்