போபால்: மூத்த தலைவரும், தற்போதைய முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானின் மீண்டும் முதல்வராகும் கனவு தகர்ந்துள்ளது. புதிய முதல்வராக மோகன் யாதவை பாஜக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச பாஜகவில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர் சிவராஜ் சிங் சவுகான். 4 முறை அங்கு முதல்வராக இருந்துள்ளார். தொடர்ந்து அவரே முதல்வராக இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு முதல்வரை மாற்றியுள்ளது பாஜக.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு மீண்டும் சவுகானே போட்டியிட்டார். ஆனால் அவருக்கு கட்சிக்குள் கடும் போட்டி காணப்பட்டது. கட்சித் தலைமையும் கூட புதிய தலைமுறைக்கு முதல்வர் பதவியைத் தர விரும்பியது. ஆனால் சவுகான் போட்டியிலிருந்து விலகாததால் இழுபறி நிலை நிலவியது.

இந்த நிலையில் இன்று போபாலில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுகான் ஆட்சியில் அவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். உஜ்ஜைனி தொகுதியிலிருந்து 3 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோகன் யாதவ்.
மோகன் யாதவ் தேர்வைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வரை மட்டும் பாஜக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நேற்றுதான் சத்திஸ்கர் மாநில முதல்வர் பதவிக்கான இழுபறி முடிவுக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம்.
அடுத்து என்ன செய்யலாம்? தவெக முதல் அதிமுக வரை...தீவிர ஆலோசனையில் கட்சிகள்
பெரும்பான்மை பெறாத தவெக.. அடுத்து என்ன நடக்கும்.. ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?
TVK Govt: ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தரப் போவது யார்.. யாரெல்லாம் ரெடியா இருக்கா?
குடிகாரரின் கலாட்டா.. டீச்சருக்கு.. முதல் வகுப்பு மாணவன் கூறிய ஆலோசனை!
சங்கடஹர சதுர்த்தி தெரியும்.. அது என்ன அங்காரக சங்கடஹர சதுர்த்தி?
ரதி.. இதை வைத்தால் இன்னும் பேரழகி... அவளின் (ல்) அவன்! (12)
திமுகவை விட 17.43 லட்சம் வாக்குகளே தவெக கூடுதலாகப் பெற்றுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
4 தொகுதிகளில் NDA.,வின் வெற்றியை பதம் பார்த்த சசிகலாவின் 'அஇபுதமுக'
Vijay Vs Udayanidhi Stalin: தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
{{comments.comment}}