போபால்: மூத்த தலைவரும், தற்போதைய முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானின் மீண்டும் முதல்வராகும் கனவு தகர்ந்துள்ளது. புதிய முதல்வராக மோகன் யாதவை பாஜக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச பாஜகவில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர் சிவராஜ் சிங் சவுகான். 4 முறை அங்கு முதல்வராக இருந்துள்ளார். தொடர்ந்து அவரே முதல்வராக இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு முதல்வரை மாற்றியுள்ளது பாஜக.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு மீண்டும் சவுகானே போட்டியிட்டார். ஆனால் அவருக்கு கட்சிக்குள் கடும் போட்டி காணப்பட்டது. கட்சித் தலைமையும் கூட புதிய தலைமுறைக்கு முதல்வர் பதவியைத் தர விரும்பியது. ஆனால் சவுகான் போட்டியிலிருந்து விலகாததால் இழுபறி நிலை நிலவியது.

இந்த நிலையில் இன்று போபாலில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுகான் ஆட்சியில் அவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். உஜ்ஜைனி தொகுதியிலிருந்து 3 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோகன் யாதவ்.
மோகன் யாதவ் தேர்வைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வரை மட்டும் பாஜக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நேற்றுதான் சத்திஸ்கர் மாநில முதல்வர் பதவிக்கான இழுபறி முடிவுக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம்.
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி
பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்
ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்
தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!
தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்
{{comments.comment}}