"பாசிச பாஜக ஒழிக" என கோஷமிட்ட மாணவி சோபியா மீதான வழக்கு ரத்து

Aug 16, 2023,01:03 PM IST
மதுரை: தமிழ்நாடு பாஜக தலைவராக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பதவி வகித்தபோது, அவர் முன்பு பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.

2018ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தார் டாக்டர் தமிழிசை.  அந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் பயணித்தவர் ஆராய்ச்சி மாணவி சோபியா. இவர் தமிழிசையைக் கண்டதும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாசிச பாஜக ஒழிக என்று அவர் கோஷமிட்டதைக் கண்டித்து டாக்டர் தமிழிசை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



பின்னர் தூத்துக்குடிக்கு விமானம் வந்ததும் டாக்டர் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் சோபியா. இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றக் கிளை இன்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சோபியா மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகள் பொருத்தமற்றவையாக உள்ளதாக கூறி நீதிபதி தனபால் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்