சென்னை: மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என கேள்வி எழுப்பி பொங்கல் அன்று நடைபெறும் தேர்வுகளை மாற்றி அமைக்குமாறு மத்திய கல்வி அமைச்சருக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்.
சிஏ-பட்டயக் கணக்காளர் தேர்வுகள் வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 12,14,16,18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த தேர்வு தேதிகளை மாற்றுமாறு கடந்த மாதம் எம்பி சு. வெங்கடேசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். இதனை அடுத்து பொங்கல் திருநாளில் நடைபெற இருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது யு சி ஜி-நெட் தேர்வு பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை 14, 15, 16,17 ஆகிய தேதிகளில் கொண்டாடுவது வழக்கமாகும். இந்த நாள் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவாகவும் கருதப்படுகிறது. இதனால் தமிழர்கள் வெகு விமர்சையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர்.
ஆனால், அதே தேதியில் யுசிஜி தேர்வு அறிவிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பொங்கலன்று அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகளை மாற்றுமாறு ஒன்றிய கல்வி அமைச்சருக்கும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குனருக்கும் எம் பி சு வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கின்ற பல்வேறு போட்டி தேர்வுகளும் பொங்கல் விடுமுறை நாளில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.
கடந்த மாதம்தான் பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் அதாவது சிஏ தேர்வு தேதியை போராடி மாற்றினோம். தற்போது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது யு சி ஜி அதாவது நெட் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்..? இந்தத் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குநருக்கும் கோரிக்கை வைத்துள்ளார் சு. வெங்கடேசன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}