மகா கும்பமேளா 2025 இன்று ஆரம்பம்... பிரயாக்ராஜில் புனித நீராட.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

Jan 13, 2025,10:13 AM IST

பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதியான இன்று துவங்கி உள்ளது. இதில் கலந்து கொண்டு புனிதநீராட லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர்.


உலகின் மிகப் பெரிய பாரம்பரிய விழாவாகவும், அதிகமான மக்கள் ஒன்று கூடும் விழாக்களில் ஒன்றாகவும் இருப்பது மகா கும்பமேளா. ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, அலகாபாத் ஆகிய நான்கு இடங்களில் நான்கு வகையான கும்பமேளாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவதை பூர்ண கும்பமேளா என்பார்கள். ஆனால் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவை மகாகும்பமேளா என்பார்கள். அப்படி 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் இன்று துவங்கி உள்ளது.




இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை சொத்தம் 41 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. அதாவது மகர சங்கராந்தி அன்று துவங்கி, மகா சிவராத்திரி வரை இந்த விழா நடைபெறும். இதில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகின் பல பகுதிகளில் இருந்தும் துறவிகள், அகோரிகள், சன்னியாசிகள் பிரயாக்ராஜில் குவிந்தள்ளனர்.


இந்த ஆண்டு நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பிற்காக உத்திர பிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. 


மகாகும்ப மேளாவிற்கு வருபவர்களை கவருவதற்காக இதன் நுழைவு வாயிலேயே 635 அடி அகலம், 54 அடி உயரத்திற்கு 12 ஜோதிர்லிங்கங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மகாகும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் லேசர் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. மகா கும்பமேளாவின் துவக்க விழா ஜனவரி 12 ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்ற கங்கா ஆரத்தி நிகழ்த்தி நடைபெற்றது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்