பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதியான இன்று துவங்கி உள்ளது. இதில் கலந்து கொண்டு புனிதநீராட லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய பாரம்பரிய விழாவாகவும், அதிகமான மக்கள் ஒன்று கூடும் விழாக்களில் ஒன்றாகவும் இருப்பது மகா கும்பமேளா. ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, அலகாபாத் ஆகிய நான்கு இடங்களில் நான்கு வகையான கும்பமேளாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவதை பூர்ண கும்பமேளா என்பார்கள். ஆனால் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவை மகாகும்பமேளா என்பார்கள். அப்படி 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் இன்று துவங்கி உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை சொத்தம் 41 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. அதாவது மகர சங்கராந்தி அன்று துவங்கி, மகா சிவராத்திரி வரை இந்த விழா நடைபெறும். இதில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகின் பல பகுதிகளில் இருந்தும் துறவிகள், அகோரிகள், சன்னியாசிகள் பிரயாக்ராஜில் குவிந்தள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பிற்காக உத்திர பிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மகாகும்ப மேளாவிற்கு வருபவர்களை கவருவதற்காக இதன் நுழைவு வாயிலேயே 635 அடி அகலம், 54 அடி உயரத்திற்கு 12 ஜோதிர்லிங்கங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மகாகும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் லேசர் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. மகா கும்பமேளாவின் துவக்க விழா ஜனவரி 12 ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்ற கங்கா ஆரத்தி நிகழ்த்தி நடைபெற்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}