கோலாலம்பூர்: இந்தியாவிலிருந்து மலேசியா செல்ல விரும்பும் இந்தியர்கள் இனிமேல் விசா இல்லாமல் அங்கு சுற்றுலா செல்லலாம் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்குத் திட்டமிடுவோர் இனிமேல் விசா இல்லாமலேயே அங்கு சென்று வர முடியும். இந்தியா மட்டுமல்லாமல் சீனாவுக்கும் இந்த சலுகையை அறிவித்துள்ளது மலேசியா. இந்தத் தகவலை பிரதமர் அன்வர் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டின்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மலேசியா பல்வேறு நாட்டவர்களால் விரும்பப்படும் ஒரு சுற்றுலா நாடாகும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்தகு. இதில் சீனாவிலிருந்து வந்தோர் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஆவர். இந்தியர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஆவர்.
இதுவே கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து 10 லட்சம் பேரும், இந்தியாவிலிருந்து நான்கு லட்சம் பேரும் வந்திருந்தனர். கொரோனா காலத்திற்குப் பின்னர் இது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை மலேசியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே மலேசியாவின் பக்கத்து நாடான தாய்லாந்து இந்த சலுகையை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இப்போது மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு சீனா, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}