கோலாலம்பூர்: இந்தியாவிலிருந்து மலேசியா செல்ல விரும்பும் இந்தியர்கள் இனிமேல் விசா இல்லாமல் அங்கு சுற்றுலா செல்லலாம் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்குத் திட்டமிடுவோர் இனிமேல் விசா இல்லாமலேயே அங்கு சென்று வர முடியும். இந்தியா மட்டுமல்லாமல் சீனாவுக்கும் இந்த சலுகையை அறிவித்துள்ளது மலேசியா. இந்தத் தகவலை பிரதமர் அன்வர் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டின்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மலேசியா பல்வேறு நாட்டவர்களால் விரும்பப்படும் ஒரு சுற்றுலா நாடாகும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்தகு. இதில் சீனாவிலிருந்து வந்தோர் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஆவர். இந்தியர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஆவர்.

இதுவே கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து 10 லட்சம் பேரும், இந்தியாவிலிருந்து நான்கு லட்சம் பேரும் வந்திருந்தனர். கொரோனா காலத்திற்குப் பின்னர் இது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை மலேசியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே மலேசியாவின் பக்கத்து நாடான தாய்லாந்து இந்த சலுகையை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இப்போது மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு சீனா, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}