கோலாலம்பூர்: இந்தியாவிலிருந்து மலேசியா செல்ல விரும்பும் இந்தியர்கள் இனிமேல் விசா இல்லாமல் அங்கு சுற்றுலா செல்லலாம் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்குத் திட்டமிடுவோர் இனிமேல் விசா இல்லாமலேயே அங்கு சென்று வர முடியும். இந்தியா மட்டுமல்லாமல் சீனாவுக்கும் இந்த சலுகையை அறிவித்துள்ளது மலேசியா. இந்தத் தகவலை பிரதமர் அன்வர் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டின்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மலேசியா பல்வேறு நாட்டவர்களால் விரும்பப்படும் ஒரு சுற்றுலா நாடாகும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்தகு. இதில் சீனாவிலிருந்து வந்தோர் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஆவர். இந்தியர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஆவர்.

இதுவே கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து 10 லட்சம் பேரும், இந்தியாவிலிருந்து நான்கு லட்சம் பேரும் வந்திருந்தனர். கொரோனா காலத்திற்குப் பின்னர் இது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை மலேசியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே மலேசியாவின் பக்கத்து நாடான தாய்லாந்து இந்த சலுகையை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இப்போது மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு சீனா, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}