விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு வந்த நபரை பரிசோதித்த போலீஸார் அவர் செய்த செயலைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர்.
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு. இதனால் புதுச்சேரி பகுதிகளை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூர், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, ஒரு சிலர் மது பாட்டில்களை கடத்தி வருவதை வழக்கமாகக் செயல்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் அப்படி கொண்டு வரப்படும் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் போதைப் பொருள்கள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசாருக்கு தெரியாமல் விதவிதமாக வழிகளில் கடத்தல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஆசாமி ஒருவர் மது பாட்டில்களை வித்தியாசமாக கடத்தியுள்ளார். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நாகமணி என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சோதனை நடத்தப்பட்ட போது அவர் செய்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர் போலீஸார்.
நாகமணி, தனது முதுகு, வயிறு, இடுப்பு,தொடை, கால் என உடலின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 120 மதுபானங்களை செல்லோ டேப் போட்டு வளைத்து வளைத்துக் கட்டியிருந்தார். ஒரு பாட்டில் கூட உடையாமல் எப்படி இப்படி கடத்தி வந்தார் என்று போலீஸாரே ஆச்சரியமாகி விட்டனர். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல சமீபத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட நிலையில், இருவர் டூவீலரில் வேகமாக வந்த போது வண்டி குலுங்கும் சத்தம் வித்தியாசமாக கேட்கவே வண்டியை நிறுத்தி சோதனை செய்யும்போது பெட்ரோல் டேங்கிற்குள் மதுபான பாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}