விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு வந்த நபரை பரிசோதித்த போலீஸார் அவர் செய்த செயலைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர்.
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு. இதனால் புதுச்சேரி பகுதிகளை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூர், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, ஒரு சிலர் மது பாட்டில்களை கடத்தி வருவதை வழக்கமாகக் செயல்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் அப்படி கொண்டு வரப்படும் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் போதைப் பொருள்கள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசாருக்கு தெரியாமல் விதவிதமாக வழிகளில் கடத்தல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஆசாமி ஒருவர் மது பாட்டில்களை வித்தியாசமாக கடத்தியுள்ளார். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நாகமணி என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சோதனை நடத்தப்பட்ட போது அவர் செய்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர் போலீஸார்.
நாகமணி, தனது முதுகு, வயிறு, இடுப்பு,தொடை, கால் என உடலின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 120 மதுபானங்களை செல்லோ டேப் போட்டு வளைத்து வளைத்துக் கட்டியிருந்தார். ஒரு பாட்டில் கூட உடையாமல் எப்படி இப்படி கடத்தி வந்தார் என்று போலீஸாரே ஆச்சரியமாகி விட்டனர். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல சமீபத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட நிலையில், இருவர் டூவீலரில் வேகமாக வந்த போது வண்டி குலுங்கும் சத்தம் வித்தியாசமாக கேட்கவே வண்டியை நிறுத்தி சோதனை செய்யும்போது பெட்ரோல் டேங்கிற்குள் மதுபான பாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}