டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக 10 வருடங்கள் பதவி வகித்தவர் டாக்டர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றார். இந்து மதத்தை சேராத முதல் சீக்கிய பிரதமராக பதவியேற்றவர் மன்மோகன் சிங் என்ற பெருமையையும் பெற்றவர்.
மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு பயனுள்ள திட்டங்களை வகுத்து சிறந்த ஆட்சி புரிந்த மன்மோகன் சிங் நேற்று வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சையை அவரது உடல் நிலையால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதால் இயற்கை எய்தினார் மன்மோகன் சிங்.
மன்மோகன் சிங் மறைவுக்கு அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது வீட்டில் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரது இறுதிச் சடங்கு நாளை அதாவது சனிக்கிழமை டிசம்பர் 28ஆம் தேதி ராஜ்காட் அருகே நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அரசு நாடு முழுவதும் 7 நாட்கள் துக்க அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பிலும் ஏழு நாட்கள் துக்க அனுசரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்திலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு இன்று ஒரு நாள் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}