டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக 10 வருடங்கள் பதவி வகித்தவர் டாக்டர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றார். இந்து மதத்தை சேராத முதல் சீக்கிய பிரதமராக பதவியேற்றவர் மன்மோகன் சிங் என்ற பெருமையையும் பெற்றவர்.
மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு பயனுள்ள திட்டங்களை வகுத்து சிறந்த ஆட்சி புரிந்த மன்மோகன் சிங் நேற்று வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சையை அவரது உடல் நிலையால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதால் இயற்கை எய்தினார் மன்மோகன் சிங்.
மன்மோகன் சிங் மறைவுக்கு அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது வீட்டில் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரது இறுதிச் சடங்கு நாளை அதாவது சனிக்கிழமை டிசம்பர் 28ஆம் தேதி ராஜ்காட் அருகே நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அரசு நாடு முழுவதும் 7 நாட்கள் துக்க அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பிலும் ஏழு நாட்கள் துக்க அனுசரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்திலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு இன்று ஒரு நாள் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}