- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 :
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே

பொருள் :
சேறுகள் நிறைந்த குளத்தில் பூத்த செந்தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே! நந்திக்கொடியை உடையனே! என்னையும் ஆட்கொள்ள வேண்டும். என் வாழ்வின் முதல் பொருளாக இருப்பவனே, பொழுது விடிந்து விட்டது. உனது மலர் போன்ற திருவடிகளை வழிபட வந்துள்ளேன். உன்னுடைய அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}