மார்கழி 29 திருப்பள்ளியெழுச்சி பாடல் 9 : விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

Jan 13, 2025,10:23 AM IST

- ஸ்வர்ணலட்சுமி 


திருப்பள்ளியெழுச்சி பாடல் 9:


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!

வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


விண்ணுலகில் இருக்கும் தேவர்களும், மற்றவர்களுக்கு நெருங்க முடியாத உயர்ந்த பரம்பொருளான சிவ பெருமானே! உன்னை வணங்கும் அடியர்களுக்கு அருள் செய்வதற்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்துள்ளாய். அருள் செய்து எங்களை வாழ வைத்தாய். இயற்கை வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் எங்கள் பெருமானே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்து பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேன் போன்றவனே! பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்றவனே! கரும்பை போன்ற தித்திப்பானவனே! உன்னை விரும்பி வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நிறைந்து இருப்பவனே! உலக உயிர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே!  உன்னுடைய அருட் பார்வை கிடைத்தால் உலக உயிர்கள் அனைத்தும் பிழைக்கும். அவற்றிற்கு அருள் செய்வதற்காக பெருமானே எழுந்தருள வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு!

news

இல்லங்கள் தோறும் சக்கரவர்த்தியாய்!

news

இருதலைக் கொள்ளியாய் ஆண்கள்.. அங்கீகரிக்கப்படாத மறுபக்கம்.. ஆண்களை கொண்டாடுவோம்!

news

நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!

news

வளம்,நோயற்ற வாழ்வு, உலக அமைதி வேண்டி... தூத்துக்குடியில் காவேரி அம்மன் வழிபாடு!

news

முதியோர் இல்லம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

அனைத்து பரிமானங்களிலும் ஆண்களே ஆதாரமாய்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்