மார்கழி 29 திருப்பள்ளியெழுச்சி பாடல் 9 : விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

Jan 13, 2025,10:23 AM IST

- ஸ்வர்ணலட்சுமி 


திருப்பள்ளியெழுச்சி பாடல் 9:


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!

வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


விண்ணுலகில் இருக்கும் தேவர்களும், மற்றவர்களுக்கு நெருங்க முடியாத உயர்ந்த பரம்பொருளான சிவ பெருமானே! உன்னை வணங்கும் அடியர்களுக்கு அருள் செய்வதற்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்துள்ளாய். அருள் செய்து எங்களை வாழ வைத்தாய். இயற்கை வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் எங்கள் பெருமானே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்து பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேன் போன்றவனே! பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்றவனே! கரும்பை போன்ற தித்திப்பானவனே! உன்னை விரும்பி வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நிறைந்து இருப்பவனே! உலக உயிர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே!  உன்னுடைய அருட் பார்வை கிடைத்தால் உலக உயிர்கள் அனைத்தும் பிழைக்கும். அவற்றிற்கு அருள் செய்வதற்காக பெருமானே எழுந்தருள வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

news

தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா

news

அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

news

40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

news

சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!

news

மதுரை மீனாட்சி நகரின் காதல்!

news

அன்பு!

news

தமிழகத்தை மீட்போம்: பிப். 21 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்! – அதிமுக அறிவிப்பு

news

உணர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்