- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 9:
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள் :
விண்ணுலகில் இருக்கும் தேவர்களும், மற்றவர்களுக்கு நெருங்க முடியாத உயர்ந்த பரம்பொருளான சிவ பெருமானே! உன்னை வணங்கும் அடியர்களுக்கு அருள் செய்வதற்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்துள்ளாய். அருள் செய்து எங்களை வாழ வைத்தாய். இயற்கை வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் எங்கள் பெருமானே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்து பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேன் போன்றவனே! பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்றவனே! கரும்பை போன்ற தித்திப்பானவனே! உன்னை விரும்பி வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நிறைந்து இருப்பவனே! உலக உயிர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே! உன்னுடைய அருட் பார்வை கிடைத்தால் உலக உயிர்கள் அனைத்தும் பிழைக்கும். அவற்றிற்கு அருள் செய்வதற்காக பெருமானே எழுந்தருள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}