மதுரைக்காரர்களே ஜாக்கிரதை.. மங்கி குல்லா கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனம்!

Nov 06, 2024,03:53 PM IST

மதுரை: மதுரையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டுக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வரும் மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து பகுதிகளில் தனியாக பூட்டியிருக்கும் வீடுகளை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மங்கி குல்லா கொள்ளையர்கள். அச்சம்பத்து அருகில் உள்ள ராம்கோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில்  சிறிய கடப்பாறைகளையும் மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தி கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். அடுத்தடுத்து அருகில் இருந்த 4 வீடுகளைகளின் கதவையும் உடைக்க முயற்சித்துள்ளனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


ஒரு வீட்டின் கதவை உடைக்க முற்பட்ட போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கோட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைக் கண்ட முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




போலீசார் கூறுகையில், கடந்தாண்டு தீபாவளியின் போது இந்த மங்கி குல்லா  கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது அதே பகுதியை நோக்கி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்கள். மேலும் இவர்கள் குறிப்பிட்ட சமுாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்