மதுரைக்காரர்களே ஜாக்கிரதை.. மங்கி குல்லா கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனம்!

Nov 06, 2024,03:53 PM IST

மதுரை: மதுரையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டுக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வரும் மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து பகுதிகளில் தனியாக பூட்டியிருக்கும் வீடுகளை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மங்கி குல்லா கொள்ளையர்கள். அச்சம்பத்து அருகில் உள்ள ராம்கோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில்  சிறிய கடப்பாறைகளையும் மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தி கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். அடுத்தடுத்து அருகில் இருந்த 4 வீடுகளைகளின் கதவையும் உடைக்க முயற்சித்துள்ளனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


ஒரு வீட்டின் கதவை உடைக்க முற்பட்ட போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கோட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைக் கண்ட முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




போலீசார் கூறுகையில், கடந்தாண்டு தீபாவளியின் போது இந்த மங்கி குல்லா  கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது அதே பகுதியை நோக்கி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்கள். மேலும் இவர்கள் குறிப்பிட்ட சமுாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்