மதுரைக்காரர்களே ஜாக்கிரதை.. மங்கி குல்லா கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனம்!

Nov 06, 2024,03:53 PM IST

மதுரை: மதுரையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டுக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வரும் மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து பகுதிகளில் தனியாக பூட்டியிருக்கும் வீடுகளை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மங்கி குல்லா கொள்ளையர்கள். அச்சம்பத்து அருகில் உள்ள ராம்கோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில்  சிறிய கடப்பாறைகளையும் மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தி கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். அடுத்தடுத்து அருகில் இருந்த 4 வீடுகளைகளின் கதவையும் உடைக்க முயற்சித்துள்ளனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


ஒரு வீட்டின் கதவை உடைக்க முற்பட்ட போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கோட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைக் கண்ட முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




போலீசார் கூறுகையில், கடந்தாண்டு தீபாவளியின் போது இந்த மங்கி குல்லா  கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது அதே பகுதியை நோக்கி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்கள். மேலும் இவர்கள் குறிப்பிட்ட சமுாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

news

Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்