மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்கனவே மழை வெளுத்து வாக்கியுள்ள நிலையில், மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யவுள்ளதாக வானிலை மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் மும்பையில் கனமழை பெய்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை சில பகுதிகளில் 50 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோத் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மராத்வாடா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வெள்ளப்பெருக்கு அச்சம் காரணமாக பைதான் பகுதியில் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை உட்பட 7 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதி வரை மகாராஷ்டிரா முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்
நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்
திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?
பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
{{comments.comment}}