மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்கனவே மழை வெளுத்து வாக்கியுள்ள நிலையில், மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யவுள்ளதாக வானிலை மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் மும்பையில் கனமழை பெய்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை சில பகுதிகளில் 50 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோத் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மராத்வாடா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வெள்ளப்பெருக்கு அச்சம் காரணமாக பைதான் பகுதியில் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை உட்பட 7 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதி வரை மகாராஷ்டிரா முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
மழையால் தத்தளிக்கும் மகாராஷ்டிரா.. மீண்டும் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!
கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}