மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்கனவே மழை வெளுத்து வாக்கியுள்ள நிலையில், மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யவுள்ளதாக வானிலை மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் மும்பையில் கனமழை பெய்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை சில பகுதிகளில் 50 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோத் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மராத்வாடா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வெள்ளப்பெருக்கு அச்சம் காரணமாக பைதான் பகுதியில் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை உட்பட 7 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதி வரை மகாராஷ்டிரா முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}