சென்னை: பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகார்கள் குறித்து கைது நடவடிக்கை எடுக்க புதிய விதிகள் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல மணப்பாறையிலும் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் மீது பாலியல் புகார்கள் எழுந்து பள்ளியை சூறையாடிய சம்பவமும் நடைபெற்றது.
இப்படி ஆங்காங்கு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவர்கள் பாதுகாப்பாக கருதும் பள்ளிகளிலேயே பாலியல் தொந்தர்வுகள் அதிகரித்து வருவதால் பெற்றோர்களிடையே அதிருப்தி நிலவி வருகின்றன. அதே சமயத்தில் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த வாரம் பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களது கல்வி சான்றிதழ் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாணவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய விதிகள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அதே சமயத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறையில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}