ஆசிரியர்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார்கள்.. சிக்கினால் சிவியர் ஆக்ஷன்.. எச்சரிக்கும் அமைச்சர்

Feb 13, 2025,03:01 PM IST

சென்னை: பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகார்கள் குறித்து கைது நடவடிக்கை எடுக்க புதிய விதிகள் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.  கடந்த வாரம் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல மணப்பாறையிலும் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் மீது பாலியல் புகார்கள் எழுந்து பள்ளியை சூறையாடிய சம்பவமும் நடைபெற்றது.




இப்படி ஆங்காங்கு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  மாணவர்கள் பாதுகாப்பாக கருதும் பள்ளிகளிலேயே பாலியல் தொந்தர்வுகள் அதிகரித்து வருவதால் பெற்றோர்களிடையே அதிருப்தி நிலவி வருகின்றன. அதே சமயத்தில் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 


இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த வாரம் பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களது கல்வி சான்றிதழ் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் மாணவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க  பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும்  ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய விதிகள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


அதே சமயத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறையில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

news

நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

news

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

news

Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!

news

தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

news

முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்