சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை களத்திற்கு வர சொல்லுங்கள். எங்களின் சாதாரண அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து தோற்கடித்துக் காட்டுகிறோம் என அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற கோயில்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலைத்துறை முற்றிலும் ரத்து செய்யப்படும். கோயில் வருமானத்தை சீரழிக்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலையை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிற்க சொல்லுங்கள். அடிமட்ட தொண்டனை வைத்து நாங்கள் வெற்றி பெற்றுக் காட்டுகிறோம் என அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டு பேசி உள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் திருக்கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை கூடுவதும், நாளுக்கு நாள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும், எங்கு பார்த்தாலும் கோயில்களில் குடமுழுக்குகளால் தேவாரம், திருவாசகம், மணி ஓசை, ஆராதனை, நடைபெறுவதும், அவர்களுக்கு எப்படி வயிறு எரிச்சலை கிளம்பாமல் இருக்கும். ஆகவே அண்ணாமலை போன்றோர்கள் ஆன்மீகத்தை வைத்து அரசியலை நடத்தலாம் என எண்ணியவர்கள் இன்றைக்கு ஆன்மிகத்தை வைத்து அரசியல் நடத்துவதற்கு இடமில்லை என்பதால் இது போன்ற சொற்றொடரை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.
எங்கள் இயக்கத்தை பொறுத்த அளவில் அடிக்கடிக்க உயர்கின்ற பந்து இது. தீட்டத்தீட்ட ஒளி தருகின்ற பட்டை வைரம் இது. அதனால் அவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும், எங்கள் இயக்கத்தினர் இன்னும் விறுவிறுப்புடன் வீர நடை போடுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். வர சொல்லுங்கள் பார்க்கலாம். தயாராக இருக்கிறோம்.
எங்கள் தலைவர் இன்றைக்கும் அறுதியிட்டு, உறுதியிட்டு நிமிர்ந்த நெஞ்சோடு ஏன்
இருமாப்பு செருக்கென்று கூட எடுத்துக் கொள்ளுங்கள். களத்திற்கு வர சொல்லுங்கள். சாதாரண அடிமட்ட தொண்டனை கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, என்று சொல்லும் அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து தோற்கடித்துக் காட்டுகிறோம் என பேசியுள்ளார்.
Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
கலைநிகழ்ச்சி களைகட்டுது.. பள்ளி வளாகம்.. ரசித்து பார்க்குது!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
{{comments.comment}}