தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயராது: அமைச்சர் சிவசங்கர்

Jun 03, 2025,11:31 PM IST

அரியலூர்: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. பேருந்து கட்டணம் உயர்வதாக வெளியாகும் செய்தி தவறானது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயர்வு என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்ற செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தி தவறானது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.


நீதிமன்றமோ இது குறித்து கருத்துக்களை மக்களிடம் கேட்டு ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைப்பாடு அல்ல. நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நடத்தப்படுகிறது. 




அரசைப் பொறுத்தவரை பேருந்து கட்டணம் உயராது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல முறை பேருந்து கட்டணம் உயர்வு என்று தகவல் வந்த போது கூட, பேருந்து கட்டண உயர்வு இருக்காது. தமிழகத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயராது என்று தமிழ் முதல்வர் தெரிவித்துள்ளார். 


தற்பொது உலக அளவில் டீசல், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், மத்திய அரசு டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வில்லை. அந்த பாதிப்பு, அந்த சுமை பொதுமக்கள் மீது ஏறக்கூடாது என்று தான் தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது என்று தெளிவு படுத்தச் சொன்னார்கள். நானும் தெளிவு படுத்தியுள்ளேன். மீண்டும் அதையே தான் வலியுறுத்த விரும்புகிறேன்.  தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாது என்று அறிவித்த காரணத்தால் தான் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அங்கே அவர்களின் வழக்கின் அடிப்படையில், மக்களின்  கருத்தை கேட்கச் சொல்லி நீதிமன்றம் அந்த அறிவுரையை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்