அரியலூர்: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. பேருந்து கட்டணம் உயர்வதாக வெளியாகும் செய்தி தவறானது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயர்வு என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்ற செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தி தவறானது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
நீதிமன்றமோ இது குறித்து கருத்துக்களை மக்களிடம் கேட்டு ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைப்பாடு அல்ல. நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நடத்தப்படுகிறது.
அரசைப் பொறுத்தவரை பேருந்து கட்டணம் உயராது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல முறை பேருந்து கட்டணம் உயர்வு என்று தகவல் வந்த போது கூட, பேருந்து கட்டண உயர்வு இருக்காது. தமிழகத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயராது என்று தமிழ் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்பொது உலக அளவில் டீசல், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், மத்திய அரசு டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வில்லை. அந்த பாதிப்பு, அந்த சுமை பொதுமக்கள் மீது ஏறக்கூடாது என்று தான் தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது என்று தெளிவு படுத்தச் சொன்னார்கள். நானும் தெளிவு படுத்தியுள்ளேன். மீண்டும் அதையே தான் வலியுறுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாது என்று அறிவித்த காரணத்தால் தான் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அங்கே அவர்களின் வழக்கின் அடிப்படையில், மக்களின் கருத்தை கேட்கச் சொல்லி நீதிமன்றம் அந்த அறிவுரையை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
செக்கச் சிவந்த அழகே.. மருதாணி !
அறுபதிலும் ஆசைகள் வரும்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... சவரன் ரூ.73,000த்தை கடந்தது!
மகளுடன் சென்று அப்பா ராமதாசை சந்தித்த அன்புமணி.. 45 minutes.. தைலாபுரத்தில் நடந்தது என்ன?
துயரத்தில் முடிந்த RCB ரசிகர்களின் கொண்டாட்டம்.. பெங்களூரில் பரபரப்பு.. நெரிசலில் 11 பேர் பலி
எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்
உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி...3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!
Thuglife: தக் லைஃப் திரைப்படம்...9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான அறிவிப்பு..திரும்பப் பெறுக..குடியரசுத் தலைவருக்கு சுவெங்கடேசன் கடிதம்
{{comments.comment}}