என் நீண்ட உரையின் முத்தாய்ப்பாக... Robert Frost கவிதையை மேற்கோள் காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு

Mar 14, 2025,02:13 PM IST

சென்னை: பட்ஜெட்டின் ஆரம்பத்தில் பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டினின் வரிகளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, என் நீண்ட உரையின் முத்தாய்ப்பாக... Robert Frost கவிதையை மேற்கோள் காட்டி முடித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டிற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். அதன்பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் ஆளுநர் உரையை வாசித்தார். அதன்பின்னர் கடந்த 11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் விவாதமும், மு.க.ஸ்டாலின் உரையும் இடம்பெற்றது. 




அதன்பின்னர் சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் போது “Inequality is a choice, but we can Choose a different path..!” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டின் வரிகளை மேற்கோள் காட்டி அமைச்சர் தங்கம் தென்ரசு உரையை தொடங்கினார். சுமார் 2 மணி 33 நிமிடங்களில் பட்ஜெட் உரையை வாசித்தார்.


உரையை முடிக்கும் போது, என் நீண்ட உரையின் முத்தாய்ப்பாக என்று கூறி,

The wooda are lively, dark and deep, But i have promises to keep, And mile to go before i sleep, And miles to go before i sleep என்ற Robert Frost கவிதையை மேற்கோள் காட்டி முடித்துள்ளார்.

இந்த கவிதை உழைப்பு உழைப்பு என ஓயாது, இமைப்பொழுதும் கண் துஞ்சாது, தமிழ்நாட்டின் நலன்குறித்து எந்நாளும் சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்ருக்கு பொருந்தும் என தெரிவித்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்