சென்னை: பட்ஜெட்டின் ஆரம்பத்தில் பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டினின் வரிகளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, என் நீண்ட உரையின் முத்தாய்ப்பாக... Robert Frost கவிதையை மேற்கோள் காட்டி முடித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டிற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். அதன்பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் ஆளுநர் உரையை வாசித்தார். அதன்பின்னர் கடந்த 11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் விவாதமும், மு.க.ஸ்டாலின் உரையும் இடம்பெற்றது.

அதன்பின்னர் சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் போது “Inequality is a choice, but we can Choose a different path..!” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டின் வரிகளை மேற்கோள் காட்டி அமைச்சர் தங்கம் தென்ரசு உரையை தொடங்கினார். சுமார் 2 மணி 33 நிமிடங்களில் பட்ஜெட் உரையை வாசித்தார்.
உரையை முடிக்கும் போது, என் நீண்ட உரையின் முத்தாய்ப்பாக என்று கூறி,
The wooda are lively, dark and deep, But i have promises to keep, And mile to go before i sleep, And miles to go before i sleep என்ற Robert Frost கவிதையை மேற்கோள் காட்டி முடித்துள்ளார்.
இந்த கவிதை உழைப்பு உழைப்பு என ஓயாது, இமைப்பொழுதும் கண் துஞ்சாது, தமிழ்நாட்டின் நலன்குறித்து எந்நாளும் சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்ருக்கு பொருந்தும் என தெரிவித்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}