சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் பகலில் வெயில் அதிகரித்தாலும், மாலையில் பருவநிலை மாற்றத்தால் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று உள் மாவட்டம் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வட தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலும் மழையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மார்ச் 20 மற்றும் 21 தேதிகளில் தமிழகத்தில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌரிகம் ஏற்படலாம். அப்போது அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்புக் குறைவு. அதேபோல் மார்ச் 22 முதல் 25 தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய கூடும்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்
விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!
விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி
தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ
ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
{{comments.comment}}