சரமாரியாக வெடித்துச் சிதறிய பேஜர்கள்.. பலர் பலி.. லெபனானை உலுக்கிய நூதன குண்டுவெடிப்பு!

Sep 17, 2024,09:38 PM IST

டமாஸ்கஸ்: லெபனான் நாட்டில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது.


இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஹிஸ்புல்லா அமைப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை அவர்கள் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் காயமைடந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்திய நேரப்படி மாலை 6 மணியாகும்.


ஈரான் ஆதரவைப் பெற்ற அமைப்புதான் ஹிஸ்புல்லா.  இந்த அமைப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தடை உள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா செயல்படுகிறது. இஸ்ரேல் - காஸா இடையிலான போரில் ஹிஸ்புல்லாவும் பல்வேறு வழிகளில் ஈடுபட்டுள்ளது. 


பேஜர் சாதனங்களில் உள்ள லித்தியம் பேட்டரிகளை அதீதமாக சூடடைய வைத்து இந்த தாக்குதலை சைபர் ஹேக்கிங் முறையில் நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும் இஸ்ரேல்தான் நடத்தியதாகவும் ஹிஸ்புல்லா கூறுகிறது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்