லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் ஆன்மீகத் தலைவர் ஒருவரின் பேச்சைக் கேட்பதற்காக கூடிய கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டு 122 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தவர்களின் உடல்கள் குவிந்து வருவதால் மருத்துவமனையில் உடல்களை வைக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரும் பரபரப்பை இந்தசம்பவம் ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸைச் சேர்ந்தவர் போலே பாபா. இவர் ஒரு ஆன்மீகத் தலைவர். இவருக்கு மிகப் பெரிய ஆதரவாளர் கூட்டம் உள்ளது. இவர் இன்று ஹத்ராஸில் ஒரு சத் சங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதாவது பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த சத் சங்கத்திற்கு போதிய அளவில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலரும் முண்டியடித்து சாமியாரைக் காண முயன்றதால் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் கொண்டனர். நெரிசல் ஏற்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டு அங்கிருந்து பலரும் தப்பி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் விழுந்து கிடந்தனர். விழுந்து கிடந்தவர்கள் மீது ஏறி பலர் தப்பி ஓடியதால் அதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
போலீஸார் உடனடியாக மக்களை கட்டுப்படுத்தி கூட்டத்தை வெளியேறச் செய்தனர். ஆம்புலன்ஸ்களும், மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலர் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
சிக்கந்த்ரா ராவ் காவல் நிலைய எல்லைப் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் உடல்களையும் அங்கு வைக்க இடமில்லை. இதனால் மருத்துவமனை முழுவதும் உடல்களைப் போட்டு வைத்துள்ளனராம்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் குமார் இதுகுறித்துக் கூறுகையியில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சுகாதார மையத்தில்தான் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு தனியார் நிகழ்ச்சி. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன. அதேசமயம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சில வசதிகளைச் செய்திருக்க வேண்டும். அது சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
சத்சங்கம் நடந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி இல்லை என்று தெரிகிறது. இதனால் அதிக அளவிலான வாகனங்கள் குவிந்து இருந்தன. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அங்கிருந்து கொண்டு வர முடியவில்லை. மக்களும் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாக முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}