மலேசியாவில் விபரீதம்.. ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி.. 10 பேர் பலி..!

Apr 23, 2024,11:19 AM IST

கோலாலம்பூர்: மலேசியாவில் கடற்படை தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலேசியாவில் ஒவ்வொரு வருடமும் கடற்படை தினம் அனுசரிக்கப்படும். இந்த தினத்தில் ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்களின், சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக கடற்படையினர் உள்ளிட்ட முப்பைடயினரும் வருடா வருடம் பயிற்சிகள் மேற்கொள்வர். இதனைக் காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.




அந்த வகையில் இந்த வருடம் மலேசியாவில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இது 90 ஆவது கடற்படை தினமாகும். இதையெட்டி   ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் ஆகியோர் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஐந்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பங்கேற்று இருந்தது.


முதற்கட்டமாக கடற்படையினரின்   ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் ஹச்.ஓ.எம் ரக ஹெலிகாப்டரில் ஏழு பேரும்,  ஃபென்னக் ரக ஹெலிகாப்டரில் மூன்று பேரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது  எதிர்ப்பாராதவிதமாக திடீரென ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. மோதிக்கொண்ட ஹெலிகாப்யர்கள் தரையில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கின. இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். 


ஒத்திகையை காண அப்பகுதியில் கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், என ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நல்ல வேலையாக ஆளில்லாத இடத்தில் விமானம் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்