மலேசியாவில் விபரீதம்.. ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி.. 10 பேர் பலி..!

Apr 23, 2024,11:19 AM IST

கோலாலம்பூர்: மலேசியாவில் கடற்படை தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலேசியாவில் ஒவ்வொரு வருடமும் கடற்படை தினம் அனுசரிக்கப்படும். இந்த தினத்தில் ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்களின், சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக கடற்படையினர் உள்ளிட்ட முப்பைடயினரும் வருடா வருடம் பயிற்சிகள் மேற்கொள்வர். இதனைக் காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.




அந்த வகையில் இந்த வருடம் மலேசியாவில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இது 90 ஆவது கடற்படை தினமாகும். இதையெட்டி   ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் ஆகியோர் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஐந்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பங்கேற்று இருந்தது.


முதற்கட்டமாக கடற்படையினரின்   ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் ஹச்.ஓ.எம் ரக ஹெலிகாப்டரில் ஏழு பேரும்,  ஃபென்னக் ரக ஹெலிகாப்டரில் மூன்று பேரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது  எதிர்ப்பாராதவிதமாக திடீரென ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. மோதிக்கொண்ட ஹெலிகாப்யர்கள் தரையில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கின. இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். 


ஒத்திகையை காண அப்பகுதியில் கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், என ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நல்ல வேலையாக ஆளில்லாத இடத்தில் விமானம் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்