கோலாலம்பூர்: மலேசியாவில் கடற்படை தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் ஒவ்வொரு வருடமும் கடற்படை தினம் அனுசரிக்கப்படும். இந்த தினத்தில் ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்களின், சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக கடற்படையினர் உள்ளிட்ட முப்பைடயினரும் வருடா வருடம் பயிற்சிகள் மேற்கொள்வர். இதனைக் காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் மலேசியாவில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இது 90 ஆவது கடற்படை தினமாகும். இதையெட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் ஆகியோர் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஐந்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பங்கேற்று இருந்தது.
முதற்கட்டமாக கடற்படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் ஹச்.ஓ.எம் ரக ஹெலிகாப்டரில் ஏழு பேரும், ஃபென்னக் ரக ஹெலிகாப்டரில் மூன்று பேரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்ப்பாராதவிதமாக திடீரென ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. மோதிக்கொண்ட ஹெலிகாப்யர்கள் தரையில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கின. இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
ஒத்திகையை காண அப்பகுதியில் கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், என ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நல்ல வேலையாக ஆளில்லாத இடத்தில் விமானம் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}