சென்னை: ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்ற கமலஹாசன் தனது முதல் பதிவை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.
இதனையடுத்து, மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்க, நேற்றே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்பியான கமல் தனது முதல் பதிவு இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், நான் வெறும் விமர்சகனாக மட்டும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. தேசத்துக்கு என் பங்களிப்பை செலுத்த வந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டிய விஷயங்களை, காரணத்தோடு எதிர்ப்பேன். ஆதரிக்க வேண்டிய விஷயங்களை உறுதியோடு ஆதரிப்பேன். ஆலோசனை கூற வேண்டிய இடத்தில் ஆக்கபூர்வமாக ஆலோசனை சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
வைகோவால் மனஉளைச்சல்...உண்ணாவிரதம் அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
{{comments.comment}}