சென்னை: ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்ற கமலஹாசன் தனது முதல் பதிவை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.
இதனையடுத்து, மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்க, நேற்றே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எம்பியான கமல் தனது முதல் பதிவு இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், நான் வெறும் விமர்சகனாக மட்டும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. தேசத்துக்கு என் பங்களிப்பை செலுத்த வந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டிய விஷயங்களை, காரணத்தோடு எதிர்ப்பேன். ஆதரிக்க வேண்டிய விஷயங்களை உறுதியோடு ஆதரிப்பேன். ஆலோசனை கூற வேண்டிய இடத்தில் ஆக்கபூர்வமாக ஆலோசனை சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்
தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்
"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!
பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!
Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!
{{comments.comment}}