சென்னை மக்களே.. கேமராவோடு கிளம்புங்க.. போட்டோ எடுங்க.. பரிசுப் பொருள் காத்திருக்கு!!

Jul 25, 2024,03:28 PM IST

சென்னை: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்.. இந்தப் பாட்டைப் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.. அப்படியே ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி பஸ்சில் பயணிக்கும்போது காணும் காட்சிகள் நமது கண் கேமராவில் சிக்கி மனதில் வந்து நிழலாக படியும்.. அதை ஏங்க அங்கேயே வச்சு வேஸ்ட் பண்றீங்க..  அப்படியே போட்டிக்கு அனுப்பி வைங்க என்று இப்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளது.


சென்னை அழகு.. எப்ப தெரியுமா.. மழை நேரத்தில்.. அப்படி ஒரு பேரழகோடு ஜொலிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்.. அந்த நேரத்தில் பேருந்து பயணம், அதிலும் ஜன்னலோர பயணம் படு சுகமானது, சுவாரஸ்யமானது. முகத்தில் வந்து மோதும் காற்று, கடந்து போகும் மனிதர்கள், கட்டடங்கள் எல்லாமே அப்படி ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும்.




இப்போதுதான் எல்லோருமே கேமராமேன் மற்றும் கேமராவுமன்தானே.. செல்லும் இடமெல்லாம் எல்லோரும் செல்போனுடன்தானே போகிறோம்.. போனை எடுத்து கிளிக்கினால் அழகான போட்டோ கிடைத்து விடும். இப்படி நீங்கள் சென்னை நகரில் பஸ்ஸில் பயணிக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை இனி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு அனுப்பி வச்சா அவங்க அதில் சிறந்ததை தேர்வு செய்து பரிசு கொடுக்கப் போறாங்க மக்களே.


இதுதொடர்பாக எம்டிசி நிர்வாகம் போட்டுள்ள எக்ஸ் பதிவில்,  மாநகர பேருந்துகளின் ஜன்னலிலிருந்து நம் சென்னையை கண்டிருக்கிறீர்களா? பரபரப்பான, அழகான பயணம்!  சிறந்த புகைப்படங்களை வரவேற்கிறோம்!  பரபரப்பான நேரத்தின் பயணம், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் அர்ப்பணிப்பு, சென்னையின் மறைந்திருக்கும் அழகை உங்களின் புகைப்படம் மூலம் வெளிக்காட்டுங்கள்! சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள்‌ காத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.


போட்டி தொடர்பான விவரங்களை அறிய இந்த இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்: http://bit.ly/photoguidejannal




அதேபோல போட்டியில் கலந்து கொள்ள, இந்த இணைப்புக்குப் போங்க:  http://bit.ly/jannalseatphoto


இந்த போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் சுதந்திர தினம்தாங்க..  அதாவது ஆகஸ்ட் 15. பிறகென்ன மக்களே செல்போனை எடுங்க.. கிளிக்குங்க.. அனுப்பி வைங்க.. என்ஜாய் பண்ணுங்க.. பரிசு வெல்லுங்க.. செல்போனை எடுங்க.. கிளிக்குங்க.. அனுப்பி வைங்க.. என்ஜாய் பண்ணுங்க.. பரிசு வெல்லுங்க.. ரிப்பீட்டு!

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்