விழுப்புரம்: பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியும் வேண்டாம், தற்போது வகித்து வரும் பாமக ஊடகப் பிரிவு பொறுப்பும் வேண்டாம். நான் சாதாரண தொண்டராக மட்டும் இருந்து கொள்கிறேன் என்று கூறி விட்டார் டாக்டர் ராமதாஸின் பேரன் முகுந்தன்.
பாமக சார்பில் நடத்தப்பட்ட புதுச்சேரி சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்ததால் கோபமடைந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், அதற்கு மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதனால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கூட்டம் முடிந்ததும் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்துக்கும், அன்புமணி ராமதாஸ், சென்னைக்கும் புறப்பட்டுப் போனார்கள். அடுத்து என்ன நடக்கும், பாமகவில் பிளவு ஏற்படுமா என்று பரபரப்பு கூடிக் கொண்டே போன நிலையில் நேற்று இரவு தைலாபுரம் தோட்டத்தில் அடுத்தடுத்து பல்வேறு சந்திப்புகள் நடந்துள்ளன. அதில் முக்கியமானது முகுந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசியதுதான்.

தாத்தா டாக்டர் ராமதாஸை, தனது குடும்பத்தோடு போய் பார்த்த முகுந்தன், தாத்தா எனக்கு இப்போது எந்தப் பொறுப்பும் வேண்டாம். மாமாவுக்கு (டாக்டர் அன்புமணி) ஆட்சேபனை இருப்பதால் நான் எந்தப் பொறுப்பையும் வகிக்க விரும்பவில்லை. ஊடகப் பிரிவு பொறுப்பும் கூட வேண்டாம். வெறும் தொண்டனாக இருந்து கொள்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் ஏதாவது பொறுப்பு கொடுத்தால் அதை ஏற்க நான் தயார். இப்போது எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு டாக்டர் ராமதாஸ், இளைஞர் சங்க தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்கிறாய் சரி, இப்போது இருக்கும் பதவியை ஏன் உதறுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த முகுந்தன், எந்தப் பொறுப்பும் இப்போது வேண்டாம் தாத்தா. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இதையடுத்து அவரது விருப்பத்தை ராமதாஸும் ஏற்றுக் கொண்டாராம். அதன் பின்னர் முகுந்தன் மறறும் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்களாம்.
இந்த சந்திப்பு குறித்த விவரம் டாக்டர் அன்புமணிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்தே அவர் டாக்டர் ராமதாஸை சந்திக்க சம்மதித்தாராம். தற்போது சென்னையிலிருந்து கிளம்பி தைலாபுரம் வந்து கொண்டுள்ளார் அன்புமணி. ராமதாஸை சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கலாம் என்று தெரிகிறது. அப்போது ராமதாஸுடன் இணைந்து பேசுவார் அன்புமணி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}