- ந.மகாலட்சுமி
காலப் பிரம்மா
யுகங்கள் பல கடந்து நின்றாலும் - உன்
ஈரடிப் பாதச்சுவடு இன்னும் மாறவில்லை!
எழுத்துக்கள் எல்லாம் உன்னிடம் வந்து - தான்
பொருள் பெற்றுப் போனது உன் வரிசையில்!
அறம் வளர்த்த பேராசான்
அறமெனும் விளக்கை ஏற்றி வைத்தாய் - மனித
அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!
"ஒழுக்கம் விழுப்பம் தரும்" என்றே - உலகுக்கு
உன்னத ஒழுக்கத்தின் வேரைச் சொன்னாய்!
மண்ணுக்கான மாமறை
மன்னன் முதல் எளியோன் வரை - இங்கே
மண்ணில் வாழும் முறையைச் சொன்னாய்!
கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி - நீ
குறுகத் தரித்தாய் உலகப் பொதுமறை!
காலம் வென்ற கவிஞன்
மொழி கடந்து, நாடு கடந்து, இனம் கடந்து - உன்
மறை மட்டும் மனிதத்தை ஆளுகின்றதே!
காகிதத்தில் வாழ்வதல்ல உன் கவிதை - அது
காலத்தின் நெற்றியில் எழுதிய வைர வரி!

பிறப்பொக்கும் பேராண்மை
பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்றாய்
சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்றாய்!
சமத்துவப் போர்க்களம் அன்றே கண்ட - நீ
சரித்திரம் போற்றும் சரிநிகர் ஞானி!
வாழ்த்தி வணங்குவோம்
குடுமி முதல் பாதம் வரை நின்ற சிலையல்ல நீ!
குறள் எனும் வடிவில் உலவும் உயிர் நீ!
(ந.மகாலட்சுமி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர். இலக்கியத் துறையில் 50க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பணியாற்றுவது, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}