எழுத்து!

Jan 26, 2026,03:18 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


உண்மை நேர்மை நியாயம் துணிச்சல்...


இதுவே எழுத்தின் இலக்கணமாம்!


இல்லாத ஒன்றை எழுதாமல் ...

உள்ளதை உள்ளபடி ,

அதை நல்லபடி சொன்னால் ....

அதுவே எழுத்து என்றாகும்!


இல்லையேல் மாற்றாய்

எழுத்துப்பிழையாய் மாறிவிடும்.....


எழுத்து ..

நம் மனதில் தோன்றும் மலர்ச்சி!




உள்ளிருந்து வெளியேறும் உணர்ச்சி!


எழுத்தினால் உருவாகும் மாபெரும் புரட்சி!


மகாகவியின் எழுத்தே...

பற்றி எரிந்த

விடுதலைக் கிளர்ச்சி!


உடல் வலிமையை விட

எழுத்தின் வலிமையே

சாலச் சிறந்தது....


வாள் முனையை விட                     

பேனா முனையே கூர்மையானது...


நல்ல எழுத்தாளனின் 

ஒரு எழுத்து...

நல்ல எழுத்தாளனின் ஒரு எழுத்து...


படிப்போரின் வாழ்க்கையையே மாற்றும் தலையெழுத்து!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

அதிகம் பார்க்கும் செய்திகள்