சென்னை: நோன்பு கஞ்சி குடிக்கும் போது பல் செட்டையும் சேர்த்து விழுங்கிய 93 வயது மூதாட்டியை 4 மணி நேரம் போராடி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். இவருக்கு 93 வயதாகிறது. தற்பொழுது நோன்பு காலம் நடைபெற்று வருவதால், 93 வயதுடைய ரசியா பேகம் நோன்பு இருந்து வந்துள்ளார். நோன்பு முடிந்த நிலையில், விரதத்தை முடிக்கும் பொழுது நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது தவறுதலாக நோன்பு கஞ்சியுடன் தனது பல் செட்டையும் சேர்ந்து விழுங்கியுள்ளார்.

பல் செட் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டதால் , மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார் ரசியா பேகம். மூச்சு விட முடியாமல், எச்சில் கூட விழுங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இரவு 2 மணியளவில் ரசியா பேகத்தை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ரசியா பேகம் உயர் ரத்த அழுத்தம் போன்ற வயோதிக வியாதிகளினாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரசியா பேகத்துக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உணவுக்குழாயில் சிக்கி இருந்த பல்செட்டை மீட்க போராடினர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாவகமாக பல்செட்டை வெளியில் எடுத்தனர். அதன் பிறகே ரசியா பேகம் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
தற்பொழுது ரசியா பேகம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}