திருச்சி: தன்னுடைய குடும்பத்தினரை சீமான் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில், இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னையும், தன் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்ற சீமான், நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் இதுவரை ஆஜராகவில்லை.
இந்த நிலையில் டிஐஜி வருண் தாக்கல் செய்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலாஜி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் சீமான் ஆஜராகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}