டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில்.. சீமானுக்கு கெடு விதித்த.. திருச்சி குற்றவியல் நீதிமன்றம்!

Apr 07, 2025,02:10 PM IST

திருச்சி: தன்னுடைய குடும்பத்தினரை சீமான் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில், இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என  என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னையும், தன் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்ற சீமான், நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.




இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் இதுவரை ஆஜராகவில்லை. 


இந்த நிலையில் டிஐஜி வருண் தாக்கல் செய்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலாஜி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் சீமான் ஆஜராகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

news

22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்

news

சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife

news

கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

news

காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!

news

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!

news

சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்

news

4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு

அதிகம் பார்க்கும் செய்திகள்