திருச்சி: தன்னுடைய குடும்பத்தினரை சீமான் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில், இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னையும், தன் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்ற சீமான், நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் இதுவரை ஆஜராகவில்லை.
இந்த நிலையில் டிஐஜி வருண் தாக்கல் செய்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலாஜி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் சீமான் ஆஜராகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!
வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
{{comments.comment}}