சென்னை: நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பெரியாரின் கொள்கையை திராவிட மாடல் கட்சியின் கொள்கையாக பின்பற்றி வரும் நிலையில் திமுக சார்பில் திக, திவிக, போன்ற பெரியார் அமைப்பினர்கள் பலரும் சீமானின் பெரியார் குறித்த அநாகரிகமான பேச்சிற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்காக ஆதாரம் கேட்டு சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருப்பினும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிக்கொண்டே இருப்பதால் திமுகவினர் தங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது போடப்பட்டுள்ளன.
இதற்கிடையே சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி அநாகரிக முறையில் நடந்து கொள்வதாகவும், எந்த ஒரு செயலிலும் தன்னிச்சையாக ஈடுபடுவதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக சுட்டிக்காட்டி, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்தனர்.
அதேபோல் பாமக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் திமுகவில் இன்று இணைந்தனர். கிட்டத்தட்ட 3000 மாற்றுக் கட்சியினர் இன்று திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}