சென்னை: நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பெரியாரின் கொள்கையை திராவிட மாடல் கட்சியின் கொள்கையாக பின்பற்றி வரும் நிலையில் திமுக சார்பில் திக, திவிக, போன்ற பெரியார் அமைப்பினர்கள் பலரும் சீமானின் பெரியார் குறித்த அநாகரிகமான பேச்சிற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்காக ஆதாரம் கேட்டு சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருப்பினும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிக்கொண்டே இருப்பதால் திமுகவினர் தங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது போடப்பட்டுள்ளன.
இதற்கிடையே சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி அநாகரிக முறையில் நடந்து கொள்வதாகவும், எந்த ஒரு செயலிலும் தன்னிச்சையாக ஈடுபடுவதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக சுட்டிக்காட்டி, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்தனர்.
அதேபோல் பாமக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் திமுகவில் இன்று இணைந்தனர். கிட்டத்தட்ட 3000 மாற்றுக் கட்சியினர் இன்று திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}