நாற்காலி

Jan 26, 2026,04:22 PM IST
- கவிதா அறிவழகன்

இருள் சூழ்ந்த இடைவெளியில்,
குவிக்கப்பட்ட ஒளியின் பிடியில்,
மூச்சற்ற ஒரு நாற்காலி,
ஆயிரம் கவிதைகள் தீட்டியது.

ஆனால் இன்றோ
கவிதைகள் வடிக்க ஆளின்றி,
ஆளுமை புரிந்த தோப்பில்
அது தனித்த மரமாக
நின்றது.



நற்பண்புகள் சுவாசித்த நாற்காலி அது,
அதை ஆளுமை செய்தவரைப் புகழ,
அகராதியே தோற்றுவிடும்.
சொல்லுக்கு மரியாதையும்,
விடாமுயற்சியில் ஆழ்ந்த நம்பிக்கையும்,
மேன்மையும், கம்பீரமும் நிறைந்த,
செயற்கரிய செயல் புரிந்த ஒரு மாமனிதர்
அமர்ந்த நாற்காலி அது.

மரியாதை நிமித்தம்,
ஒவ்வொரு மனிதரும் அவர் முன் கைகட்டி நின்றனர்.
அவரது மரணம் எத்தனித்த பின்னர்,
அந்தப் புனிதத்தின் தாளம் இன்னும் நீடிக்கவே செய்கிறது,
நாங்கள் சுவாசிக்கும் காற்றில் அவரது மூச்சுக்காற்று எதிரொலிக்கின்றது.

அந்தப் புனிதமான இருக்கைக்கு ஈடு இணை ஏதுமில்லை,
மனிதநேயத்திற்கு அவர் ஆற்றிய சேவையின் மாண்பால் உருவானது அது.
அந்த நாற்காலி இன்றும் அழியாமல் இருக்கிறது,
தலைமுறைகளைத் தாண்டி ஆட்சி செய்கிறது,
கற்றுக் கொடுக்கிறது,
இன்மை, ஒரு மகத்தான இருப்பின் 'மதிப்பை' உணர்த்துகிறது.

(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்