நாற்காலி

Jan 26, 2026,04:22 PM IST
- கவிதா அறிவழகன்

இருள் சூழ்ந்த இடைவெளியில்,
குவிக்கப்பட்ட ஒளியின் பிடியில்,
மூச்சற்ற ஒரு நாற்காலி,
ஆயிரம் கவிதைகள் தீட்டியது.

ஆனால் இன்றோ
கவிதைகள் வடிக்க ஆளின்றி,
ஆளுமை புரிந்த தோப்பில்
அது தனித்த மரமாக
நின்றது.



நற்பண்புகள் சுவாசித்த நாற்காலி அது,
அதை ஆளுமை செய்தவரைப் புகழ,
அகராதியே தோற்றுவிடும்.
சொல்லுக்கு மரியாதையும்,
விடாமுயற்சியில் ஆழ்ந்த நம்பிக்கையும்,
மேன்மையும், கம்பீரமும் நிறைந்த,
செயற்கரிய செயல் புரிந்த ஒரு மாமனிதர்
அமர்ந்த நாற்காலி அது.

மரியாதை நிமித்தம்,
ஒவ்வொரு மனிதரும் அவர் முன் கைகட்டி நின்றனர்.
அவரது மரணம் எத்தனித்த பின்னர்,
அந்தப் புனிதத்தின் தாளம் இன்னும் நீடிக்கவே செய்கிறது,
நாங்கள் சுவாசிக்கும் காற்றில் அவரது மூச்சுக்காற்று எதிரொலிக்கின்றது.

அந்தப் புனிதமான இருக்கைக்கு ஈடு இணை ஏதுமில்லை,
மனிதநேயத்திற்கு அவர் ஆற்றிய சேவையின் மாண்பால் உருவானது அது.
அந்த நாற்காலி இன்றும் அழியாமல் இருக்கிறது,
தலைமுறைகளைத் தாண்டி ஆட்சி செய்கிறது,
கற்றுக் கொடுக்கிறது,
இன்மை, ஒரு மகத்தான இருப்பின் 'மதிப்பை' உணர்த்துகிறது.

(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!

news

பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை

news

ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!

news

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

news

சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!

news

இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

news

An Empty Wallet.. காலியான பணப்பை!

அதிகம் பார்க்கும் செய்திகள்