- வே.ஜெயந்தி
மக்களாட்சி மலர்ந்தது,
அடிமைச் சங்கிலி
அறுந்து விழுந்தது
இப்பொன்னாள்.
சட்டமே அரசாய் நின்றது,
சமத்துவம்
சாதியைக் கடந்தது
இந்நாள்.
உரிமை குரலாய் எழுந்தது,
உழைப்பின் மதிப்பு
உயர்ந்தது
இந்த நாள்.

எழுத்தும் ஓட்டுமாக
அதிகாரம்
மக்கள் கையில்
வந்த நாள்.
பெண்ணும் ஆணுமாய்
பேதமின்றி
வாய்ப்பு சமமாய்
பிறந்த நாள்.
மொழி, இனம், மதம்
தாண்டி
ஒரே தேசம்
என்ற உணர்வு
வளர்ந்த நாள்.
வறியவன் கனவும்
வல்லவன் கனவும்
ஒரே சட்டத்தின்
நிழலில்
பாதுகாப்பு பெற்ற நாள்.
கொடி மட்டும் அல்ல,
கனவுகளும்
உச்சியில் பறந்தது
இந்த நாள்.
வரலாறு சொன்ன
வலி நிறைந்த
பாதையை
வெற்றி நடை
ஆக்கிய நாள்.
காக்கப்பட வேண்டும்
என்ற பொறுப்பின் நாள்
குடியரசு நாள்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி: சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : ராஜினாமா செய்தவர்களை வேட்பாளராக்கிய தவெக
{{comments.comment}}