எழுத்தும் ஓட்டுமாக.. அதிகாரம் மக்கள் கையில் வந்த நாள்!

Jan 26, 2026,04:09 PM IST

- வே.ஜெயந்தி


மக்களாட்சி மலர்ந்தது,

அடிமைச் சங்கிலி

அறுந்து விழுந்தது

இப்பொன்னாள்.


சட்டமே அரசாய் நின்றது,

சமத்துவம்

சாதியைக் கடந்தது

இந்நாள்.


உரிமை குரலாய் எழுந்தது,

உழைப்பின் மதிப்பு

உயர்ந்தது

இந்த நாள்.




எழுத்தும் ஓட்டுமாக

அதிகாரம்

மக்கள் கையில்

வந்த நாள்.


பெண்ணும் ஆணுமாய்

பேதமின்றி

வாய்ப்பு சமமாய்

பிறந்த நாள்.


மொழி, இனம், மதம்

தாண்டி

ஒரே தேசம்

என்ற உணர்வு

வளர்ந்த நாள்.


வறியவன் கனவும்

வல்லவன் கனவும்

ஒரே சட்டத்தின்

நிழலில்

பாதுகாப்பு பெற்ற நாள்.


கொடி மட்டும் அல்ல,

கனவுகளும்

உச்சியில் பறந்தது

இந்த நாள்.


வரலாறு சொன்ன

வலி நிறைந்த

பாதையை

வெற்றி நடை

ஆக்கிய நாள்.


தலைமுறை தோறும்

தர்மமும் நீதியும்

காக்கப்பட வேண்டும்

என்ற பொறுப்பின் நாள் 

குடியரசு நாள்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்