- வே.ஜெயந்தி
மக்களாட்சி மலர்ந்தது,
அடிமைச் சங்கிலி
அறுந்து விழுந்தது
இப்பொன்னாள்.
சட்டமே அரசாய் நின்றது,
சமத்துவம்
சாதியைக் கடந்தது
இந்நாள்.
உரிமை குரலாய் எழுந்தது,
உழைப்பின் மதிப்பு
உயர்ந்தது
இந்த நாள்.

எழுத்தும் ஓட்டுமாக
அதிகாரம்
மக்கள் கையில்
வந்த நாள்.
பெண்ணும் ஆணுமாய்
பேதமின்றி
வாய்ப்பு சமமாய்
பிறந்த நாள்.
மொழி, இனம், மதம்
தாண்டி
ஒரே தேசம்
என்ற உணர்வு
வளர்ந்த நாள்.
வறியவன் கனவும்
வல்லவன் கனவும்
ஒரே சட்டத்தின்
நிழலில்
பாதுகாப்பு பெற்ற நாள்.
கொடி மட்டும் அல்ல,
கனவுகளும்
உச்சியில் பறந்தது
இந்த நாள்.
வரலாறு சொன்ன
வலி நிறைந்த
பாதையை
வெற்றி நடை
ஆக்கிய நாள்.
காக்கப்பட வேண்டும்
என்ற பொறுப்பின் நாள்
குடியரசு நாள்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
{{comments.comment}}