- வே.ஜெயந்தி
மக்களாட்சி மலர்ந்தது,
அடிமைச் சங்கிலி
அறுந்து விழுந்தது
இப்பொன்னாள்.
சட்டமே அரசாய் நின்றது,
சமத்துவம்
சாதியைக் கடந்தது
இந்நாள்.
உரிமை குரலாய் எழுந்தது,
உழைப்பின் மதிப்பு
உயர்ந்தது
இந்த நாள்.

எழுத்தும் ஓட்டுமாக
அதிகாரம்
மக்கள் கையில்
வந்த நாள்.
பெண்ணும் ஆணுமாய்
பேதமின்றி
வாய்ப்பு சமமாய்
பிறந்த நாள்.
மொழி, இனம், மதம்
தாண்டி
ஒரே தேசம்
என்ற உணர்வு
வளர்ந்த நாள்.
வறியவன் கனவும்
வல்லவன் கனவும்
ஒரே சட்டத்தின்
நிழலில்
பாதுகாப்பு பெற்ற நாள்.
கொடி மட்டும் அல்ல,
கனவுகளும்
உச்சியில் பறந்தது
இந்த நாள்.
வரலாறு சொன்ன
வலி நிறைந்த
பாதையை
வெற்றி நடை
ஆக்கிய நாள்.
காக்கப்பட வேண்டும்
என்ற பொறுப்பின் நாள்
குடியரசு நாள்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}