நாகை டூ இலங்கை.. கப்பல் இன்னிக்குப் போகலையாம்.. 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Oct 10, 2023,10:23 AM IST

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்தியா இலங்கை இடையே தற்போது விமானப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டனத்திற்கும் - காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.




3 மணி நேர பயணம் கொண்ட இந்த கப்பலின் வெள்ளோட்டம வெற்றிகரமாக முடிந்த நிலையில் இன்று முதல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 40க்கும் மேற்பட்டோர் இந்த கப்பலில் பிரயாணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.


ஆனால் தற்போது திடீரென இந்த பயணம் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர்கள் தொடக்க விழாவுக்கு வருவதற்கு வசதியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.


அக்டோபர் 12ம் தேதி காலை 7 மணிக்கு கப்பல் நாகையிலிருந்து புறப்படும் என்று தற்போது அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

news

விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி

news

பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

news

திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்

news

ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்

news

தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்