நாகப்பட்டனம் டூ இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து.. இன்று முதல் கோலாகல தொடக்கம்!

Aug 16, 2024,11:00 AM IST

நாகப்பட்டனம்:   நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு  கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது.


கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி நாகை டூ இலங்கை காங்கேசன் துறை வரை கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி  துவங்கி வைத்தார். மழை, கடல் சீற்றம், சூறாவளி காற்று, உள்ளிட்ட காரணங்களால் பலமுறை இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.




இந்த நிலையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில்  நாகை டூ இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று முதல் கப்பல் சேவை  தொடங்கப்பட உள்ளது. இந்த கப்பலுக்கு சிவகங்கை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் தினமும் காலை 8 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும் என்றும், மறு மார்க்கமாக இலங்கையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மாலை 6:00 மணிக்கு நாகையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று  தொடங்கப்பட  இந்த கப்பல் சேவை இன்று மட்டும் நாகை துறைமுகத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணி மணிக்கு இலங்கை காங்கேசன் துறையை சென்றடைகிறது. மறு மார்க்கமாக நாளை மறுநாள் இலங்கையில் இருந்து புறப்பட்டு நாகையை வந்தடையும்.


இந்தக் கப்பலில் பயணம் செய்வதற்கு  133 இருக்கைகள் கொண்ட சாதாரண வகுப்பில் பயண கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் 5000 ஆகவும், 27 இருக்கைகள் கொண்ட ப்ரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு ரூபாய் 7500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாம்பார் சாதம், தயிர் சாதம், தொடங்கி நூடுல்ஸ் போன்ற உணவுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பயணம் செய்ய பயணிகள் மட்டுமல்லாமல் முதலீட்டாளர்களும் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.


இந்தக் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பயணிகள் இலங்கை செல்வதற்கு மிகுந்த ஆர்வத்துடன் நாகை துறைமுகத்தில் அதிகளவு குவிந்துள்ளனர். இந்த சொகுசு கப்பலில் பல்வேறு சலுகைகள் இடம்பெற்றிருப்பதை காணவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்