சென்னை: டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசிடம் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பத்தாவது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில முதல்வர்களும், யூனியன் பிரதேச முதல்வர்களும், கலந்து கொண்டுள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
குறிப்பாக இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்க குரல் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம். ஆனால் இந்த ஆண்டு கலந்து கொண்டிருக்கிறார். என்னைப் பொருத்தவரை தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்கள் கேட்டு வாங்கி வந்தாலும் அது முதலமைச்சருக்கு பெருமையாகத் தான் இருக்கும்.
அதே நேரத்தில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவு வைத்து தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர் மத்திய அரசுடன் இணக்கமான உறவுகளை வைத்துக்கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}