நடிகை நயன்தாராவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி.. போலீஸ் தீவிர சோதனை

Oct 08, 2025,05:06 PM IST

சென்னை:  பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படுவதாக சமீப காலமா வதந்திகள் பெருகி வருகின்றன. இந்த வரிசையில் நடிகை நயன்தாரா  வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.


கடந்த வாரம் நடிகர் விஜய், நடிகை திரிஷா, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. ஆளுநர் மாளிகை, முதல்வர் வீடு என வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன.


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நயன்தாராவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தலைமை இயக்குநரின் அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. இந்த தகவலை அறிந்ததும், தேனாம்பேட்டை காவல்துறையினர் உடனடியாக நயன்தாராவின் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். ஆனால், எந்த வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை. இந்த மிரட்டல் ஒரு பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.




நயன்தாரா தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால், அவரது வீடு பூட்டப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக அங்கு காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நயன்தாராவின் ஆழ்வார்பேட்டை வீடு சுமார் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பங்களாவாகும். இது ஒரு ஸ்டுடியோவாகவும் செயல்படுகிறது. சமீபத்தில் இந்த வீடு நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் விருப்பத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் ஒரு இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.


கடந்த வாரமும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் சென்னை காவல்துறையை திணறடித்தன. அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 10 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். நடிகர் விஜய், நடிகை திரிஷா, எஸ்.வி.சேகர் ஆகியோரின் வீடுகள் மட்டுமின்றி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் வீடுகளுக்கும் மிரட்டல்கள் வந்தன. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுக்கள் (BDDS), காவல்துறையினர் மற்றும் மோப்ப நாய்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், விரிவான சோதனைகளுக்குப் பிறகும் எந்த வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை.


நயன்தாரா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஆர்.ஜே. பாலாஜியின் 2020 ஆம் ஆண்டு வெளியான 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகமாகும். இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாய். மேலும், கன்னடத்தில் யஷ் நடிக்கும் பெரிய பட்ஜெட் படமான 'Toxic' படத்திலும் அவர் யஷின் சகோதரியாக நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'மான சங்கர வரப்பிரசாத் கார்' படத்திலும், மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் பாசில் ஆகியோருடன் 'பேட்ரியாட்' படத்திலும் நடிக்கிறார். இவை தவிர, 'ரக்காயி', 'மண்ணங்கட்டி சின்ஸ் 1960', 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' மற்றும் கவினுடன் ஒரு பெயரிடப்படாத படமும் வெவ்வேறு கட்டங்களில் தயாரிப்பில் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்