பழமொழியும் உணவுப் பழக்கமும்.. எத்திக்கில் தேடினாலும்.. அற்புதமான ஒரு காய்தான்.. நம்ம நெல்லிக்காய்!

Mar 18, 2025,01:31 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: பித்தம் தணிக்க நெல்லிக்காய் .. இந்தப் பழமொழி கேட்டிருக்கீங்களா.. அருமையான ஒன்றுங்க.. நம்ம முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டுச் சென்ற அருமையான பழமொழி இது. உணவுப் பழக்கத்துக்காக கூறப்பட்டது இது.


பித்தம் தணிக்க நெல்லிக்காய்:


நமது உடல் வாதம், பித்தம் கபம் என எந்த தன்மையோடு இருந்தாலும் பெரிய நெல்லிக்காய் நம் உடலை சமன் செய்வதில் சிறந்த பங்கு வகிக்கிறது.  உடலில் உள்ள பித்தத்தை தணிக்க ஆம்லா எனப்படும் நெல்லிக்காய் அதீத நன்மை வகிக்கிறது. இதனை பற்றி இங்கு பார்ப்போம் வாருங்கள் பிரண்ட்ஸ்.


நெல்லிக்கனி பயன்படுத்தும் முறைகள்:




1. ஒரு நெல்லிக்காயை பொடியாக நறுக்கி நன்றாக ஜூஸ் போட்டு தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது இந்து உப்பு போட்டு குடிக்கலாம். இதனை ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக குடிக்க உடல் உஷ்ணத்தை குறைத்து பித்தம் தணிக்க உதவும்.


2. நெல்லிக்காய் தயிர் பச்சடி அதாவது நெல்லிக்காய் துருவல் அல்லது  பொடியாக கட் செய்து தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுப்புண்  அமிலத்தன்மை  குறையும். நெல்லி பொடியையும் தயிர் உடன் சாப்பிடலாம்.


3. நெல்லிக்கனி எலுமிச்சையுடன்: இவ்விரண்டையும் சம அளவில் ஜூஸ் செய்து தண்ணீர் கலந்து உட்கொள்ள பித்தம் குறையும்.


4. எலுமிச்சை சாதம் செய்யும் போது சிறிது நெல்லி துருவலையும் சேர்த்து சாப்பிடலாம்.


5. நெல்லிக்காயை உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து தேன் அல்லது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.


6. நெல்லி தொக்கு செய்து இட்லி சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


நெல்லிக்காயின் பயன்கள்:


* நெல்லிக்கனியில் இயற்கையாகவே தண்ணீர் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்ததால் இது பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.

* இளநரை தடுக்கும்

* செரிமானத்தை மேம்படுத்துகிறது.

* இரத்த சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு கட்டுப்படும்.

* இதயத்திற்கு உகந்தது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ,மற்றும் உடல் எடை குறைக்கும்.

* கண்களுக்கு மிகவும் நல்லது .

* சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது. 

* ரத்தத்தை சுத்திகரிக்கிறது .

* தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்த உதவுகிறது. 

* இதில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. 

* நரம்பு ஆரோக்கியம் மேம்படுகிறது.


நெல்லிக்கனியில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நிறைந்துள்ளது .உடலில் பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு ,அஜீரணம், மலம் கடினமான மாற்றம் , அல்சர் ,கோபம்  வாயில் உப்பு சுவை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் ஒரே மருந்து பித்தம் தணிக்கும் நெல்லிக்கனி சிறந்த உணவாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!

news

சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!

news

செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா

news

Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!

news

குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்

news

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?

news

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!

news

வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!

news

Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்