- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: பித்தம் தணிக்க நெல்லிக்காய் .. இந்தப் பழமொழி கேட்டிருக்கீங்களா.. அருமையான ஒன்றுங்க.. நம்ம முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டுச் சென்ற அருமையான பழமொழி இது. உணவுப் பழக்கத்துக்காக கூறப்பட்டது இது.
பித்தம் தணிக்க நெல்லிக்காய்:
நமது உடல் வாதம், பித்தம் கபம் என எந்த தன்மையோடு இருந்தாலும் பெரிய நெல்லிக்காய் நம் உடலை சமன் செய்வதில் சிறந்த பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள பித்தத்தை தணிக்க ஆம்லா எனப்படும் நெல்லிக்காய் அதீத நன்மை வகிக்கிறது. இதனை பற்றி இங்கு பார்ப்போம் வாருங்கள் பிரண்ட்ஸ்.
நெல்லிக்கனி பயன்படுத்தும் முறைகள்:
1. ஒரு நெல்லிக்காயை பொடியாக நறுக்கி நன்றாக ஜூஸ் போட்டு தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது இந்து உப்பு போட்டு குடிக்கலாம். இதனை ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக குடிக்க உடல் உஷ்ணத்தை குறைத்து பித்தம் தணிக்க உதவும்.
2. நெல்லிக்காய் தயிர் பச்சடி அதாவது நெல்லிக்காய் துருவல் அல்லது பொடியாக கட் செய்து தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுப்புண் அமிலத்தன்மை குறையும். நெல்லி பொடியையும் தயிர் உடன் சாப்பிடலாம்.
3. நெல்லிக்கனி எலுமிச்சையுடன்: இவ்விரண்டையும் சம அளவில் ஜூஸ் செய்து தண்ணீர் கலந்து உட்கொள்ள பித்தம் குறையும்.
4. எலுமிச்சை சாதம் செய்யும் போது சிறிது நெல்லி துருவலையும் சேர்த்து சாப்பிடலாம்.
5. நெல்லிக்காயை உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து தேன் அல்லது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
6. நெல்லி தொக்கு செய்து இட்லி சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
நெல்லிக்காயின் பயன்கள்:
* நெல்லிக்கனியில் இயற்கையாகவே தண்ணீர் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்ததால் இது பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.
* இளநரை தடுக்கும்
* செரிமானத்தை மேம்படுத்துகிறது.
* இரத்த சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு கட்டுப்படும்.
* இதயத்திற்கு உகந்தது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ,மற்றும் உடல் எடை குறைக்கும்.
* கண்களுக்கு மிகவும் நல்லது .
* சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது.
* ரத்தத்தை சுத்திகரிக்கிறது .
* தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்த உதவுகிறது.
* இதில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.
* நரம்பு ஆரோக்கியம் மேம்படுகிறது.
நெல்லிக்கனியில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நிறைந்துள்ளது .உடலில் பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு ,அஜீரணம், மலம் கடினமான மாற்றம் , அல்சர் ,கோபம் வாயில் உப்பு சுவை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் ஒரே மருந்து பித்தம் தணிக்கும் நெல்லிக்கனி சிறந்த உணவாக இருக்கும்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}