சென்னை: திரைப்படங்களில் கேப்டனின் பாடலை பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் பெருந்தன்மையோடு கூறியுள்ளார். இது விஜயகாந்த் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வரிசையில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் சமீபகாலமாக ஹவுஸ் புல் காட்சிகளுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. அதிலும் அட்டகத்தி தினேஷ் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்த படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகரான அட்டகத்தி தினேஷ், கிரிக்கெட் மைதானத்துக்குள் என்ட்ரி ஆகும்போது, விஜயகாந்த் படத்தில் வரும் பிரபல பாடலான" நீ பொட்டு வெச்ச தங்க குடம்" பாடல் ஒலிக்கும். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தியேட்டர்களில் இப்பாடல் ஒலிக்கும் போது ரசிகர்களின் கரவொலியால் அரங்கமே அதிர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இப்பாடல் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரனுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், படங்களில் விஜயகாந்த் பற்றிய காட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படங்களில் கேப்டனின் பாடல்கள், போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை எல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம்.கேப்டன் எங்களின் சொத்தல்ல. மக்களின் சொத்து. சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படத்திலும் கேப்டன் நடித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}