சென்னை: திரைப்படங்களில் கேப்டனின் பாடலை பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் பெருந்தன்மையோடு கூறியுள்ளார். இது விஜயகாந்த் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வரிசையில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் சமீபகாலமாக ஹவுஸ் புல் காட்சிகளுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. அதிலும் அட்டகத்தி தினேஷ் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இந்த படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகரான அட்டகத்தி தினேஷ், கிரிக்கெட் மைதானத்துக்குள் என்ட்ரி ஆகும்போது, விஜயகாந்த் படத்தில் வரும் பிரபல பாடலான" நீ பொட்டு வெச்ச தங்க குடம்" பாடல் ஒலிக்கும். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தியேட்டர்களில் இப்பாடல் ஒலிக்கும் போது ரசிகர்களின் கரவொலியால் அரங்கமே அதிர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இப்பாடல் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரனுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், படங்களில் விஜயகாந்த் பற்றிய காட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படங்களில் கேப்டனின் பாடல்கள், போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை எல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம்.கேப்டன் எங்களின் சொத்தல்ல. மக்களின் சொத்து. சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படத்திலும் கேப்டன் நடித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}