டெல்லி: மத்திய அரசு புதிய வருமான வரி மசோதா 2025-ஐ திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்.பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான லோக்சபா குழு அளித்துள்ள 285 பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதாவின் முக்கிய நோக்கம், இந்தியாவின் வரி சட்டங்களை நவீனமயமாக்கி எளிதாக்குவதே ஆகும். குழப்பத்தை தவிர்க்கவும், அனைத்து மாற்றங்களையும் ஒரே வரைவில் ஒருங்கிணைக்கவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகப்படுத்தினார். ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

வெள்ளிக்கிழமையை புதிய மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. அன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் மசோதாவை தாக்கல் செய்வது திங்கட்கிழமைக்கு தள்ளிப்போனது. 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது.
புதிய மசோதாவில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது. சட்டத்தின் முக்கிய கொள்கைகள் அப்படியே இருக்கும். ஆனால், சட்டத்தின் அமைப்பு மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்கள் இருக்கும். இதன் மூலம் சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். வரி செலுத்துவதை எளிதாக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வரி செலுத்துபவர்கள் நிபுணர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}