டெல்லி: மத்திய அரசு புதிய வருமான வரி மசோதா 2025-ஐ திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்.பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான லோக்சபா குழு அளித்துள்ள 285 பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதாவின் முக்கிய நோக்கம், இந்தியாவின் வரி சட்டங்களை நவீனமயமாக்கி எளிதாக்குவதே ஆகும். குழப்பத்தை தவிர்க்கவும், அனைத்து மாற்றங்களையும் ஒரே வரைவில் ஒருங்கிணைக்கவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகப்படுத்தினார். ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
வெள்ளிக்கிழமையை புதிய மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. அன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் மசோதாவை தாக்கல் செய்வது திங்கட்கிழமைக்கு தள்ளிப்போனது. 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது.
புதிய மசோதாவில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது. சட்டத்தின் முக்கிய கொள்கைகள் அப்படியே இருக்கும். ஆனால், சட்டத்தின் அமைப்பு மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்கள் இருக்கும். இதன் மூலம் சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். வரி செலுத்துவதை எளிதாக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வரி செலுத்துபவர்கள் நிபுணர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
டிரம்ப் போட்ட 50% வரியால் பாதிப்பு.. இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு ரூ 87,000 கோடி இழப்பு!
{{comments.comment}}