டெல்லி: மத்திய அரசு புதிய வருமான வரி மசோதா 2025-ஐ திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்.பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான லோக்சபா குழு அளித்துள்ள 285 பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதாவின் முக்கிய நோக்கம், இந்தியாவின் வரி சட்டங்களை நவீனமயமாக்கி எளிதாக்குவதே ஆகும். குழப்பத்தை தவிர்க்கவும், அனைத்து மாற்றங்களையும் ஒரே வரைவில் ஒருங்கிணைக்கவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகப்படுத்தினார். ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
வெள்ளிக்கிழமையை புதிய மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. அன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் மசோதாவை தாக்கல் செய்வது திங்கட்கிழமைக்கு தள்ளிப்போனது. 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது.
புதிய மசோதாவில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது. சட்டத்தின் முக்கிய கொள்கைகள் அப்படியே இருக்கும். ஆனால், சட்டத்தின் அமைப்பு மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்கள் இருக்கும். இதன் மூலம் சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். வரி செலுத்துவதை எளிதாக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வரி செலுத்துபவர்கள் நிபுணர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}