மேஷ ராசிக்காரர்களே...இயற்கையாகவே தலைமை பண்பும், பொறுப்பும், தனித்துவமான சிந்தனையும் கொண்டவர்கள் நீங்கள். எந்த விஷயத்தை செய்வதாக இருந்தாலும் உங்களுக்கு என்ற தனி பாணி வைத்திருப்பீர்கள். அநீதியை கண்டு பொறுக்காதவர்கள் நீங்கள். தன்னம்பிக்கையும், எதையும் எதிர்கொள்ள துணிச்சலும் மிக்கவர்கள் நீங்கள். இருந்தும் உணர்ச்சிவசப்படும் குணத்தை பொறுமையை இழக்கும் குணத்தால் பல சமயங்களில் சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள்.
பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் தேடி வந்து குடியும் ஆண்டாக இருக்க போகிறது. இருந்தாலும் எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வதால் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் இனி இருக்காது. அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சாதமான பலன்கள் ஏற்படும்.

வீட்டில் விசேஷங்கள் அணிவகுக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஆனால் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும். பெருமைகளும் தேடி வரும். உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது உடல் நலத்தை காக்கும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
செலவுகளை திட்டமிட்டு செய்தால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் முழு முயற்சி, கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் தான். லாபமும் தடையின்றி அதிகரிக்குள். முதலீடுகள் செய்யும் போது சிந்தித்து முடிவு எடுங்கள். யாருக்கும் வாக்குறுதி அளிப்பதற்கு முன் யோசித்து விட்டு செயல்படுங்கள்.
கலை துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் சோம்பலை தவிர்த்து முழு கவனம் செலுத்தினால் படிப்பில் சாதனை படைக்கலாம். உடல்நிலையில் நரம்பு, தலைவலி, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வர வாய்ப்புள்ளது. பயணங்களின் போது நிதான போக்கை கையாள வேண்டும்.
பெண்கள் எதிலும் அவசரம் இன்றி நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பொன், பொருள் மீதான ஆசை அதிகரிக்கும். புகுந்த இடத்தில் உங்களின் செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
வழிபாடுகள் : புத்தாண்டில் மேஷ ராசியினர் மனக்குழப்பங்கள், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, இருக்கும் பிரச்சனைகள் நீங்க திருச்செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் செந்தில் ஆண்டவரை வழிபடுவது நன்மை உண்டாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}