நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் நாகப்பட்டனம் துறைமுகத்திலிருந்து வடக்கு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் வழிப் போக்குவரத்து நாளை முதல் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் தரைவழி போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து மிகவும் சிறப்பானதாக உள்ளது. ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் போன்ற போக்குவரத்து சேவை மக்களுக்கு சிறப்பான சேவையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது நீர் வழிப் போக்குவரத்தும் இணையவுள்ளது.
நாகப்பட்டினம் முதல் இலங்கை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. வடக்கு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு இந்த கப்பல் போக்குவரத்து நடைபெறும். இதற்கான பயணக் கட்டணம் ஜிஎஸ்டி உட்பட 7670 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. செரியாபாணி வகையிலான மினி சொகுசுக் கப்பலாகும் இது. இந்தக் கப்பல் கொச்சியில் வடிவமைக்கப்பட்டதாகும். நேற்று நடைபெற்ற சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக இருந்தது. சோதனை ஓட்டம் என்பதால் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் பயணிகள் இல்லாமல் கப்பலைச் சேர்ந்த 14 பணியாளர்கள் மட்டும் பயணித்தனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இலங்கை துரைமுகத்திற்கு சென்றடைய மூன்று மணி நேரம் ஆனது. பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை முயற்சி வெற்றி பெற்றதை, தொடர்ந்து இன்றும் வெள்ளோட்டம் நடைபெறும். அதன் பின்னர் நாளை முதல் இந்த கப்பல் போக்குவரத்து முறைப்படி தொடங்கும்
இந்த கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}